my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

வாரத்தில் மூன்று முறை உடலுறவு !

ஒரு கணவனும் மனைவியும் மருத்துவரிடம் பரிசோதனைக்காக சென்றனர் . அவரது மனைவியின் இதயத்தை பரிசோதித்த மருத்துவர் “உங்களுக்கு மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது ,அதனால் வாரத்தில் முன்று நாட்களேனும் தாங்கள் உடலுறவில் ஈடுபடுவது தங்களுக்கு நல்லது “என்றார்

அந்தப் பெண் மிகவும் வெட்க்கப்பட்டு பின் “இதை நீங்களே எனது கணவரிடம் சொல்லிவிடமுடியுமா ? “ எனக் கேட்டார்

உடனே மருத்துவர் வெளியில் வந்து அவளது கணவனை அழைத்து “உங்களுடைய மனைவிக்கு வாரத்தில் மூன்று நாட்களேனும் உடலுறவு அவசியம் “என்றார்.

அந்த கணவர் “ எந்தெந்த நாட்களில் டாக்டர் ? “ என்றார்

அதற்க்கு மருத்துவர் “ திங்கள் , புதன் மற்றும் வெள்ளி சரியாக இருக்கக்கூடும் “ எனச் சொன்னார்

அந்த அப்பாவி கணவரோ “ திங்கள் மற்றும் புதன் அவளை நான் இங்கு அழைத்து வரமுடியும் , ஆனால் வெள்ளிக்கிழமை அவள் தான் பேருந்தில் வந்துகொள்ள வேண்டும் “என்றார்

காதில் மாட்டிய பட்டாணி

கால்பந்துப் பயிற்சியாளர் , பொடாட்டோ ( potato ) என்பவர் தொலைக்காட்சியில் ஒரு கால்பந்து விளையாட்டை ஓய்வாகப் பட்டாணியைக் கொறித்துக் கொண்டே பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய மனைவி அங்கே வந்து, அவரது கவனத்தைக் கலைக்க முயன்றாள் . அப்பொழுது தவறுதலாக, ஒரு பட்டாணியை அவருடைய காதுக்குள் போட்டுவிட்டார், பிறகு அவர் எவ்வளவோ முயன்றும் அதை வெளியே எடுக்க முடியவில்லை.

அந்த சமயம் , அவருடைய மகளும் ,மகளின் நண்பனும் ஓடி வந்து தன் தகப்பனார் தன் தலையை அப்படியும் இப்படியும் ஆட்டியவாறு, காதுக்குள் கையை விட்டுத் தோண்டுவதாக இருப்பதைப் பார்த்தார்கள்.

பிறகு அந்த மகளின் நண்பன் சிப் , “ நான் உதவி செய்கிறேன் “ என்று சொல்லிவிட்டு , மேலும் அவன் , “ இப்போழுது நான் என் இரண்டு விரல்களையும் உங்கள் மூக்குத் துவாரத்துக்குள் விட்டு அடைத்து, உங்களுடைய மறு காதுக்குள் பலமாக ஊதப் போகிறேன் “ என்று சொல்லிவிட்டு , அப்படியே செய்ய , அந்தப் பட்டாணியும் வெளியே வந்து விழுந்து விட்டது, பொடாட்டோ மிகவும் ஆனந்த மடைந்து, மறுபடியும் உற்சாகமாத் தொலைக்காட்டியைப் பார்க்க ஆரமித்தார்.

அன்று இரவு, அவரும் அவரது மனைவியும் படுககையில் படுத்திருக்கும்போது, அவள் , “ அந்த சிப் பையன் நல்லவனாகத் தெரிகிறது . அவன் கல்லுரியை விட்டு வெளியே வந்த பிறகு அவன் என்ன ஆவான் என்று நினைக்கிறீர்கள் ? ” என அவரிடம் கேட்டாள்.

அதற்கு அவர் , ” எனக்குப் புரியவில்லை , இருந்தாலும், அவனுடைய விரல்களின் வாசனையை முகர்ந்த பொழுது, அவன் நமது மருமகனாக வரக்கூடும் என்று கருதுகிறேன் ! “ என்றார்

- ஓஷோ ( ஓம் சாந்தி சாந்தி சாந்தி )

டாஷ்மாக்கில் முல்லா

டாஷ்மாக் கடை நண்பர் முல்லாவிடம் “ என்ன ? நசுருதீன் இன்று சீக்கிரமாகவே போகிறீர்கள் ?

முல்லா , “ இது என்னுடைய அன்றாட பிரச்சனை , மனைவி ! “

நண்பர் “ என்னது மனைவியா ? அவரிடம் பயமா உங்களுக்கு ? நீரெல்லாம் ஒரு ஆண்மகனா ? அல்லது எலியா ? ”என்றார்,

முல்லா “ நான் ஒரு ஆண்மகன்தான் ! “

நண்பர் “ அப்படியென்றால் ஏன் இவ்வாளவு சீக்கரமாக செல்கிறாய் ? நீ ஆண்மகன் என்பதற்க்கு என்ன ஆதாரம் ? “

முல்லா “ நான் நிச்சயமாக சொல்கிறேன் நான் ஒரு ஆண்மகன் தான் , என்னுடைய மனைவிக்கு எலிகள் என்றால் பயம் எனக்கு என் மனைவி என்றால் பயம் , நான் மட்டும் எலியாக இருந்திருந்தால் ?எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் ? “ என்றார்
-------------------------------------------------------------------------------------------------
முல்லா ஒரு மன நல மருத்துவரிடம் சென்று தான் இரவுகளில் தொடர்ச்சியாக காணும் கொடிய கனவை பற்றி மிகவும் பயந்தார்,.

ம.மருத்துவர் “ கவலைப்படதே நசுருதீன் , முதலில் என்ன கனவு கண்டாய் சொல் ! “

முல்லா “ நான் , நான் திருமணம் செய்வதாக கனவு கண்டேன்!”

ம.ம “ அதனால் என்ன ? ஏன் பயப்படவேண்டும் ? கனவினில் யாரை திருமணம் செய்தாய் சொல் ! “

முல்லா “ எனது மனைவியைத்தான் , அதனால்தான் பயந்துவிட்டேன் என்றார் “

வேலையோடு விளையாடு!!!

கவலைப்படாமல் விளையாடிக்கொண்டிருப்பதுதான்
பிரபஞ்சம்
ஆனால் மனிதன் ,தன் வாழ்வில்
வேலை செய்வதைத்தவிர எதையும் செய்வதில்லை
இதனால் அவனுக்கு எல்லாமே தலைகீழாகிவிடுகின்றது

அதனால்தான், அவனுக்கு வேதனைகள்.

பிரபஞ்சத்தின் தாவோ, பிரபஞ்ச விதி
ஒரு லீலை-ஒரு விளையாட்டு.

மனிதப் பகுத்தறிவிற்கு எட்டியது,வேலைதான்.
ஏனென்றால், பயன் கருதாமல்,அதற்கப்பால்
சிந்திக்க பகுத்தறிவால் முடியாது.

ஆனால்,இருத்தல்,இருப்பது,பயன்பாட்டுக்கு அப்பால்

இந்த இடைவெளி பற்றி ஆழமாக் யோசி.
உனக்கு பாலம் கிடைக்கும்-
பாலம் அவசியம்.
ஏனென்றால் வேலையின்றி வாழ்வும் முடியாது.
வேலைக்காக மட்டும் வாழ்வது சகிக்க முடியாதது;
அது வாழ்வே அல்ல.


தியானிப்பவன் வேலையும் செய்வான்
ஆடிப்பாடியும் மகிழ்வான் –
வேலை செய்வதே அவனுக்கு விளையாட்டு-
அதனால்தான அப்படி.
தியானமற்றவன் விளையாடலாம்,வேலை செய்யலாம்.
அவன் விளையாடுவதே
வேலை செய்யத்தான்.
---ஓஷோ (இரண்டாவது கோப்பைத் தேநீர் )

சந்தோஷமாக வாழ ஓஷோ அவர்கள் ஒரு கதை சொல்கிறார்.

வயதான கிழவர் தன் நூறாவது பிறந்த நாளை மிகவும் சந்தோஷமாக கொண்டாடுகிறார். அவரை பார்த்து வியந்தவர்கள் "எப்படி சந்தோஷமாக வாழ்வதாக கேட்டபோது அவர், " ஒவ்வொரு நாளும் நான் கண் விழிக்கிற போது சந்தோஷமாயிருப்பதா ? வேதனைப்படுவதா ? என்று கேட்டு விட்டு சந்தோஷத்தை தேர்வு செய்கிறேன்" என்றார்.
***

ஒரு ஜென் குரு தன் சீடர்களிடம், " நான் பாட்டிலில் ஒரு வாத்தை போட்டேன். இப்போது அந்த வாத்து வளர்ந்து விட்டது. பாட்டிலின் கழுத்தோ மிகச் சிறியது. எனவே வாத்து வெளியே வர முடியவில்லை. அது ஒரு சிக்கலாகி விட்டது. வெளியே வராவிட்டால் வாத்து செத்துவிடும். பாட்டிலை உடைத்து வாத்தை வெளியேற்றலாம். ஆனால், பாட்டிலை உடைக்க நான் விரும்பவில்லை. அது விலைமதிப்புள்ள ஒன்று. என்ன செய்வது என்று நீங்கள் சொல்லுங்கள்" என்றார்.
பாட்டில் தலையில் உள்ளது அதன் கழுத்தோ குறுகியது. தலையை உடைக்கலாம். ஆனால் அது விலைமதிப்புள்ளது. அல்லது வாத்தை சாகவிடலாம். ஆனால், அதையும் அனுமதிக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் தான் அந்த வாத்து.
அந்த ஜென் குரு தொடர்ந்து சீடர்களைக் கேட்டார். அவர்களை அடித்தார். சீக்கிரம் வழி கண்டுபிடியுங்கள் என்றார். ஒரே ஒரு பதிலை தான் அவர் ஏற்றுக் கொண்டார். ஒரு சீடன் கூறினான், " வாத்து வெளியில் தான் இருக்கிறது !"
நீங்கள் வெளியே இருக்கிறீர்கள். எப்போதும் நீங்கள் உள்ளே இருந்ததில்லை. உள்ளிருப்பதாக எண்ணுவது தவறான கருத்து. எனவே, நிஜமான பிரச்சனை என்பது எதுவும் இல்லை என்பதை விளக்க இந்த கதையை ஓஷோ சொல்லுகிறார்.
***
குருட்ஜீஃப் பின் தன் சீடர்க்கள் முழுமையாக சரணடைதல் தேவைப்பட்டது. அவர் எதை சொன்னாலும் பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டார். ஒரு குறிப்பிட்ட பயிற்சியை கூறுவார். அதை செய்து கொண்டிருக்கும் போது 'நிறுத்து !' என்பார். உடனே நிறுத்திவிட வேண்டும்.
ஒரு நாள் காலையில் கால்வாயில் இறங்கி நடக்கிற போது அவர் நிறுத்து என்று சொல்லிவிட்டு, தன் டென்ட்டிற்குப் போய்விட்டார். நான்கு சீடர்கள் கால்வாயில் நின்றிருந்தனர். யாரோ தண்ணீரைத் திறந்து விட, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வந்தது.
குருட்ஜூஃப் உள்ளே போய்விட்டார். அவருக்கு தெரியாது. ஆனாலும் சீடர்கள் காத்திருந்தனர்.
கழுத்துவரை தண்ணீர் வந்து விட்டது. ஒருவன் கரைக்கு ஓடி விட்டன். "இது ரொம்பவும் அதிகம். குருவுக்கு எப்படி தெரியும் ? " என்றான்.
மற்ற இரண்டு சீடர்களும் மூக்குவரை தண்ணீர் வந்ததும் வெளியேறி விட்டனர். ஆனால், ஒரு சீடன் மட்டும் அப்படியே நின்றான். தண்ணீர் அவன் தலையைத் தொட்டு ஓடிக் கொண்டிருந்தது. அவன் மூழ்கிக் கொண்டிருந்தான்.
தன் அறையை விட்டு பாய்ந்து வந்த குருட்ஜீஃப் தண்ணீரில் குதித்து அவனை காப்பாற்றிக் கொண்டு வந்தார்.
மரணத்தில் இருந்து வந்த சீடர் கண்களை திறக்கும் போது புதிய மனிதனாக இருந்தான். அவனுக்குள் மாற்றம் நிகழ்ந்திருந்தது. அந்தப் பழைய மனிதன் இறந்து அவன் புதிதாகப் பிறப்பெடுத்திருந்தான்.
அந்த சீடன் குருவை முழுமையாக ஏற்றுக் கொண்டான். தன் மனதையும், அதன் கணக்குகளையும் அவன் நிராகரித்தான். தன் வாழ்வின் மீதான பற்றை நிராகரித்து, உயிராசையைத் துறந்தான். அதனால் அதான் அவனை எதுவும் நகர்த்தி விடவில்லை என்பதை ஓஷோ இந்த கதையின் மூலம் சொல்லுகிறார்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

உங்கள் வாழ்க்கை யாத்திரையை காலையில் இருந்து தொடங்குவதாக மாற்றுங்கள்


வாழ்க்கை ஒரு விளையாட்டு அதில் நீங்கள் விளையாட்டாக ஈடுபடுங்கள்.வாழ்கையை விளையாட்டு கண்கொண்டு பாருங்கள் .இறுக்கமற்ற நிலையில் விளையாட்டுத் தனத்திற்கும் ,இறுக்கமான நிலைக்கும் உள்ள வேறுபாடு மிகபெரியது .நீங்கள் உங்கள் அலுவலகத்திற்கு செல்ல வீதியில் நடக்கும் போது உங்கள் மனம் முற்றிலும் வேறுபட்டு இருக்கும் .இறுக்கமாக பேராசையோடு ,கவலையோடு முரண்பட்டு இருக்கும் .அதே பாதையில் நீங்கள் காலையில் கடந்து செல்லும் போது அதே வீதிதான் ,அதே மரம் தான் ,பறவைகளும் அதே தான் ஆகாயமும் அதே தான் ,அதில் செல்லும் மக்களும் அதே தான் .
உங்களிடம் எந்த இறுக்கமும் கிடையாது .எந்த முரண்பாடும் கிடையாது .ஏன் என்றால் நீங்கள் எந்த குறிபிட்ட இடத்திற்கும் செல்லவில்லை .வெறுமனே சாலையில் மகிழ்ச்சியாக நடக்கிறீர்கள் அவ்வளவுதான் .
அமைதியாக இருங்கள் :
இறுக்கமற்று விளையாட்டாக எதிலும் இடுபடுங்கள் பிறகு நீங்கள் செய்வது எல்லாம் தியானம் தான் விளையாட்டாக செய்யும் எதுவும் தியானதன்மை உடையதுதான் .நீங்கள் இறுக்கமற்று ,மகிழ்ச்சியோடு இருக்கும் பொழுது உங்களிடம் இயற்கையாக எழும் ஒரு ஆனந்தம்தான் தியானம் .எதையும் நீங்கள் தியானமாக்கலாம் .நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இறுக்கமற்ற விளையாட்டு தனம்தான் .அப்பொழுது அது உங்களிடம் எந்த விதமான இறுக்கநிலையையும் உண்டு பண்ணாது. ஆகவே எப்படி பரபரப்பு இல்லாமல் இருப்பது என்று கற்றுக்கொள்ளுங்கள் .காலையில் நடக்கும் வீதி இமயமலையில் உள்ள அமைதியான குகைக்கு சமம் .
வெளியே தள்ளுங்கள் :
பயம் ,பரபரப்பு ,இறுக்கம் போன்ற உணர்ச்சிகள் ஆரம்பிக்கும் பொழுதே நீங்கள் ஆழமான மூச்சை வெளியே விட்டு அவைகளை வெளியே தள்ளுங்கள் .காற்றில் அந்த பயத்தை ,இறுக்கத்தை வெளியே முழுமையாகத் தள்ளிவிட்டதாக வெறுமனே உணருங்கள் .பிறகு மூச்சை உள்ளே நன்றாக இழுங்கள் .சுத்த காற்றை உள்ளே இழுத்து உங்கள் மார்பும்,உள் காற்று குழாய்களும் நன்றாக விரிவடைவதை உணருங்கள் .இதை போல ஏழுதடவை செய்தால் ,திடீர் என்று எந்தப் பிரச்சனையும் உங்களிடம் இல்லை என்பதை உணர்வீர்கள் .
இதை போல சுமார் 2 வாரம் செய்யுங்கள் ,இதில் முக்கியமான செய்தி நீங்கள் மூச்சை வெளியே விடும் போது நீங்கள் உங்களின் இறுக்கத்தன்மையைவெளியே விடுவதாக உணர்தல் தான் .மூச்சை ,எதையும் உங்களுக்குள் செலுத்தவும் வெளியே தள்ளவும் உபயோகிக்கலாம் .
    ஓய்விற்கு இது நேரம் இல்லை
சில சமயம் உங்களுக்கு இரவில் தூக்கம் வரவில்லை என்றால் அதற்காக கவலை படத் தேவைஇல்லை .அந்த நேரத்தை வேலை செய்ய உபயோகயுங்கள் , சக்தியை அதில் உபயோகயுங்கள். மனம் மற்றும் உடல் களைக்கும்அளவுக்கு மேலும் கீழும் நடக்கலாம் ,சற்று ஓடலாம் ,நீண்ட தூரம் நடக்கலாம் . படுக்கைகள் படுத்த படி துக்கத்திற்க்காக முயற்சிப்பதை விட இப்படி ஆககபுர்வமான வகையில் உங்கள் சக்தியை செலவுசெய்வது பயன் தரும் .

மூச்சு திணறினாலும்.... இதமான சூட்டில்..



குளிர்ப் பிரதேசம் ஒன்றில் புரட்சி எண்ணங் கொண்ட ஒரு சிட்டுக்குருவி வாழ்ந்து வந்தது. இலையுதிர்கால இறுதிக் கட்டம் நெருங்கியபோது மற்ற குருவிகள் அனைத்தும் தென்திசையை நோக்கிப் பறக்க ஆயுத்தமாயின. ஆனால் இந்த சிட்டுக்க்குருவி மட்டும் அவைகளோடு செல்லக் கூடாதெனத் தீர்மானித்துவிட்டது.

குளிர்காலம் வந்தது . குளிரின் ஆக்ரோஷத்தில் அந்த சிட்டுக்குறுவி கலங்கிவிட்டது. கடைசியில் அதுவும் தெற்கு நோக்கி பறக்க தீர்மானித்த போது, அந்த குளிரின் கடுமையில் பறந்தால் மரணம் நிச்சயம் என்பதை அறிந்து இருந்த இடத்திலேயே இருந்துவிட்டது. அதன் இறக்கைகளில் பனி படர்ந்து அதனை பறக்கவிடாமல் செய்தது. அது மரத்தினின்று கீழே ஒரு விவசாயின் வீட்டு முற்றத்தில் வீழ்த்திவிட்டது.

அந்த முற்றத்தில் சென்று கொண்டிருந்த பசு ஒன்று அந்த சிட்டுக்குருவி மீது சாணம் போட்டுவிட்டுச் சென்றுவிட்டது.

சிட்டு குருவிக்கு மூச்சு திணறினாலும் அந்த சாணத்தின் சூடு வெப்பம் அதற்கு இதமாக இருந்தது. சூட்டினாலும் , மூச்சுவிட முடிந்ததாலும் மகிழ்ச்சியுற்ற அந்த சிட்டுக்குருவி பாட ஆரம்பித்தது.

அந்தப் பக்கமாக வந்த பூனை பாட்டு வரும் திசையைக் கண்டது. சாணத்தை அகற்றிப் பார்த்தது. பறவையை பார்த்ததும் மகிழ்ச்சியோடு அதை விழுங்கிவிட்டது.

ஓஷோ சொல்கிறார்

இந்த கதையில் மூன்று கருத்துக்களை காணலாம்.

ஒன்று ; உன் மீது சாணம் போடுபவன் உன் எதிரியாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இரண்டு: உன்னை சாணத்திலிருந்து அகற்றுபவன் உன் நண்பனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.

மூன்று: நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய், சாணத்தின் இதமான சூட்டில் அடங்கி இருக்கிறாய் என்றால், உன் வாயை மூடிக் கொண்டிரு.