my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

வியாழன், 1 நவம்பர், 2012

மனதின் கதை – ஓஷோவின் கதை


ஓரு பிரபல திபெத்திய கதை........                                                    

ஓரு மனிதன் ஓரு வயதான குருவுக்குத் தினமும் சேவை
புரிந்து வந்தான். உணவு தருவது, கிணற்றிலிருந்து நீர்
இறைப்பது, கால்களை அமுக்கிவிடுவது போன்ற
சேவைகள். வயதான குருவோ, “ஏன் உன் நேரத்தை
வீண் செய்கிறாய்என்று கூறுவது வழக்கம். ஏனெனில்
அந்த குருவுக்கு இந்த சேவையின் நோக்கம் ஏதோ
ஆசைதான் என்பது தெளிவாகப் புரிந்திருந்தது.                               

முடிவில் ஓரு நாள் அந்த மனிதன்,  “நான் உங்களுக்கு
சேவை புரியக் காரணம் எனக்கு ஏதாவது ஓர் அதிசயம்
ஓரே ஓரு அதிசயமாவது செய்ய கற்றுக் தர வேண்டும்
என்றான்.                                  
 அதற்கு அந்த வயதான குரு,“ஆனால் எனக்கு எந்த
அதிசயமும் செய்யத் தெரியாது. நீ உன் நேரத்தை
தேவையின்றி வீண் செய்து விட்டாய். நீ வேறு யாராவது
அதிசயங்கள் செய்ய தெரிந்தவரைப் போய் பார்என்று
கூறினார்.
  ஆனால்  அந்த மனிதனோ,  ”உங்களுக்கு அதிசயம் செய்யத்
தெரியாது என்று எப்போதும் நீங்கள் மறுத்து வருகிறீர்கள்
என்று எனக்குத் தெரியும். ஆனால் நீங்கள் எப்போதும்
அதிசயங்களை நடத்திதான் வருகிறீர்கள். பிறர் என்னிடம்
கூறியுள்ளார்கள் நீ அவர் கூறுவதைக் கேட்காதே.
அவருக்கு சேவை செய்துகெர்ண்டே வா. ஓருநாள் அவர்
உனக்கு ஏதாவது ரகசியம் கூறுவார். ஆனால் அதற்கு நீ
ஏற்றவனாக இருக்கிறாயா என்று பார்த்துவிட்டுத்தான்
கூறுவார் என்று கூறியுள்ளனர். ஓருவேளை நான்
இன்னும் அதற்குத் தக்கவாறு கனியவில்லையோ
என்னவோஎன்று கூறினான்.                                                             
 சில நாட்கள் கழித்து, அந்த வயதான குரு, இந்த மனிதன்
இன்னும் தேவையேயின்றி வேலை செய்து வருவதைக்
கண்டார். யாரோ இவன் மனதில் நான் அதிசயம் புரிபவன்
என்ற எண்ணத்தை விதைத்து விட்டனர். “ஓருவேளை
அதிசயங்கள் நடக்கலாம். ஆனால் அவை தாமாகவே
நடப்பவை. நான் அவற்றை செய்வதில்லை.”                        
 உயர்ந்த தன்னுணர்வு நிலை அடைந்த மனிதர்களிடம்,
இப்படிப் பல விஷயங்கள் தானாகவே நடக்கும். எப்படி
சூரியன் உதிக்கும்போது பறவைகள் பாடுகின்றனவோ
அப்படித்தான். சூரியன் இந்த அதிசயத்தை செய்வதில்லை.
மலர்கள் தங்கள் இதழ்களை தாமாகவே திறக்கின்றன.
சூரியன் இந்த அதிசயத்தை புரிவதில்லை. சூரியன்
இருந்தால் போதும், இந்த அதிசயங்கள் தாமே நடக்கும்.
இப்படி தன்னுணர்வு நிலையில் விழிப்பு பெற்ற ஓரு
மனிதனின் இருப்பே பல மலர்கள் இதழ் மலரவும், பல
பறவைகள் கானம் பாடவும் போதுமானதாக இருக்கும்.                                   
 அந்த வயதான குரு,“நான் உனக்கு ஏதாவது
ரகசியத்தைக் கூறினால் அன்றி நீ என்னை விட்டுப்
போகமாட்டாய் போலிருக்கிறதேஎன்றார். அந்த மனிதன்,
அது உண்மைதான்என்றான். ஆகவே குரு நான் உனக்கு
ஓரு ரகசிய மந்திரம் கூறுகிறேன். ஓரு சிறு மந்திரம்.
திபெத்திய மந்திரம் ஓம் மணி பத்மீ ஹம்என்பதை
எழுதித்தருகிறேன்என்றார். ஓம்  என்பது வாழ்விருப்பின்
நிரந்தர ஓசை, மணி பத்மீ ஹம் என்றால் தாமரைப் பூவில்
இருக்கும் வைரமணி. மணி என்றால் வைரம், பத்மம்
என்றால் தாமரை. ஆக அதன் அர்த்தம் நிரந்தர ஓசையும்,
தாமரை பூவுக்குள் இருக்கும் வைரமும் என்பதாகும். இது
முக்தி நிலை என்பதன் அர்த்தமாகும். எங்கும் பரந்து உள்ள
நிரந்தர ஓசையும், தாமரையின் அழகும், மேலும்
தாமரையின் உள்ளிருக்கும் வைரத்தின் ஓளியும். ஓரு
சின்ன மந்திரத்திற்குள் அவர்கள் முக்தி அனுபவத்தின்
முழுமையையும் சுருக்கி விவரித்துள்ளனர்.
 அந்த வயதான குரு, “இந்த மந்திரத்தை எடுத்துச் சென்று,
இதை ஐந்து முறை, வெறும் ஐந்தே ஐந்து முறை கூறு.
முதலில் குளி. புத்தாடைகளை உடுத்திக்கெரள். கதவுகளை
மூடிக்கெர்ண்டு தனியே ஓரிடத்தில் அமர்ந்து  இந்த
மந்திரத்தை ஐந்தே ஐந்து முறை கூறு. பிறகு நீ எந்த
அதிசயம் வேண்டுமானாலும் செய்யலாம்என்று கூறினார்.
 அந்த மனிதன் வேகமாக வெளியேறத் துவங்கினான்.
அவன் தன் நன்றி உணர்வைக் காட்டக்கூட
முயலவில்லை. நன்றி என்று கூறக்கூட முயலவில்லை.
உடனே கோயில் படிகளில் இறங்கி ஓடி விட்டான். அவன்
பாதிதூரம் போனபோது, அந்த குரு,“நில்! ஓன்றைக் கூற
மறந்து விட்டேன். இந்த மந்திரத்தைக் கூறும்போது
ஓன்று நினைவிருக்கட்டும். குரங்கைப் பற்றி  நினைக்கவே
கூடாது!என்று சத்தமாகக் கூறினார்.
 அந்த மனிதன்,“நான் ஏன் குரங்கைப் பற்றி நினைக்கப்
போகிறேன், என் வாழ்வில் இதுவரை நான் நினைத்ததே
இல்லைஎன்றான். குரு,“சரிதான், ஆனால்
நினைவிருக்கட்டும்! குரங்கு மட்டும் கூடவே கூடாது. 
குரங்கின் நினைவு வந்தால் நீ மறுபடி ஐந்து தடவை
மந்திரம் கூற வேண்டும்என்றார்.
 அந்த மனிதன் குரங்கு எதற்காக வரும்?” என்றான். குரு,
எனக்குத் தெரியாது. நான் உனக்கு இரகசியத்தைக்
கூறிவிட்டேன்.இதுதான் எனது குரு எனக்குக் கூறிய
இரகசியமாகும்.என்றார்.
 ஆனால் அவன் படிகளில் இறங்கத் துவங்கும் முன்பே
குரங்குகளைப் பற்றி நினைக்கத் துவங்கி விட்டான். அவன்,
அடக் கடவுளே நான் இன்னும் மந்திரம் கூறக் கூட
ஆரம்பிக்கவில்லை. ஆனால் குரங்குகள் வந்துவிட்டனவே!
என்று கூறினான். அவன் கண்களை மூடியபோதும்
குரங்குகள்.குரங்குகள் இளித்துக் கெரண்டு,அவனைப்
பார்த்து மூஞ்சியைக் காட்டின. அவன்,“இது ஓரு விநோத
மந்திரம்தான். நான் இன்னும் துவங்கவேயில்லை,
அதற்குள்ளா?” என்றான்.
 அவன் வீட்டைச் சென்றடைந்தபோது குரங்குகளால்
சூழப்பட்டிருந்தான். அவன் எங்குப் பார்த்தாலும்
குரங்கைத்தான் கண்டான். உள்ளே சென்று குளித்தான்.
ஆனால் அதனால் எந்தப் பயனுமில்லை. குளியலறையில்
மூடிய கதவிற்குப்பின் குரங்குகள் சுற்றி அமர்ந்திருந்தன.
அவன், “அந்தக் கிழவன் ஓரு முட்டாள். இந்தக்
குரங்குதான் பிரச்னை என்றால் அவன் இதைப் பற்றி
குறிப்பிட்டிருக்கவே கூடாது. யானைகள் வரவில்லை.
ஓட்டகங்கள் வரவில்லை. சிங்கங்களும் வரவில்லை.
குரங்கைக் தவிர வேறெதுவுமே வரவில்லை.என்று
நினைத்தான்.
 பிறகு அவன் கால்களை மடித்து பத்மாசன நிலையில்
அமர்ந்து கண்களை மூடிக் கெர்ண்டான். ஆனால் அதற்கு
எந்த பயனுமில்லை. குரங்குகள் அவனை இடித்தன.
குரங்குகள் மடியில் உட்கார்ந்து கெர்ண்டன. சுற்றிலும்
ஓரே குரங்குக்கும்பல்தான். அவனுக்கு மிகவும்
கவலையாகி விட்டது.   அவன் மனைவி அவனை கடந்து
சென்றபோது அவன் பார்த்தான். அப்போது அவளும் கூட
ஓரு குரங்கு போல..... இல்லை, இல்லை, அவள் என்
மனைவி. அவன் தந்தை கடந்து போனார். பார்த்தால் கிழக்
குரங்குபோல...... சிலமுறை அவன் தந்தைபோலத்
தெரிந்தார். அந்த மனிதன், “ஐயோ நான் பைத்தியமாகி
விடுவேன்என்று நினைத்துக் கெரண்டான்.
 ஐந்து தடவை என்பது மிக அதிகம். அந்த மந்திரமான ஓம்
மணி பத்மீ ஹம் என்ற நான்கு வார்த்தைகளை ஓரு
முறை கூட முடிக்கவிட வில்லை. அத்தனை குரங்குகள்.
அன்றிரவு முழுவதும் அவன் முயன்றான். நிறைய முறை
குளித்தான். ஓருவேளை அவனது உடுப்புகள் போதுமான
அளவு தூய்மையாக இல்லையோ என நினைத்துக்
கெரண்டு நடு இரவில், அந்த குளிர்காலத்தில் அவன்
நிர்வாணமாக நின்றான். இப்போது அழுக்கு துணிகள்
பற்றியோ, அல்லது வேறு எது பற்றியோ எந்தக்
கேள்வியும் இல்லை. ஆனால் குரங்குகளும் சுற்றிலும்
காலை மடித்துகெரண்டு பத்மாசனம் போட்டு
அமர்ந்திருக்கின்றன. அவன் அவற்றைப் பார்த்துச்
சப்தமிட்டான். அவை சிரித்தன. 
 காலையில் அவன் கிட்டதட்ட பைத்தியமாகிவிட்டான். 
அந்த கிழவன் தந்திரக்காரன். எத்தனை வருடங்களாக
நான் சேவை செய்தேன். முடிவில் அவன் எனக்கு
இரகசியத்தையும் தந்து, கூடவே இந்தக் குரங்குகளையும்
தந்து அந்த இரகசிய மந்திரத்தை நாசமாக்கி விட்டானே!
என்றான் அவன்.
 அவன் அந்த குருவிடம் திரும்பிச் சென்று, அந்த
மந்திரத்தை திருப்பி தந்துவிட்டு, “நீங்களே வைத்துக்
கெர்ள்ளுங்கள். ஏனெனில் அந்தக் குரங்குகள்......என்றான். 
அந்தக் குரு, “அவை உன்னிடம் வரவே வராது என்றாயே
என்றார்.அவன், “நான் இதுவரை என் வாழ்வில் ஓரு
குரங்கைப் பற்றிக்கூட எண்ணியதோ,கனவில் கண்டதோ
நேரில் கூட கண்டதோ கிடையாது. இலட்சக்கணக்கான
விலங்குகளைப் பற்றி நான் யோசித்ததேயில்லை,
அவசியமுமில்லை. நீங்கள் அந்த வார்த்தையைக்
கூறாமலிருந்திருந்தால் என்னால் அதிசயங்களை
நிகழ்த்தி இருக்க முடியும். ஆனால் அது இப்போது
நடவாத காரியமாகி விட்டது.என்றான். 
 குரு.நான் என்ன செய்வது? குரங்கு அந்த மந்திரத்துடன்
இணைந்து வரும். குரங்கு இல்லையேல் அந்த மந்திரம்
பயனில்லை. குரங்கைத் தவிர்க்கும் வழி தெரியாவிட்டால்
உன்னால் அதிசயங்களை நிகழ்த்த முடியாது.என்றார்.
 அந்த மனிதன்,“நான் எல்லா அதிசயங்களை பற்றியும்
மறந்தே போய்விட்டேன். இந்த மந்திரத்தைத் திருப்பி
எடுத்துக் கெரண்டு என்னை குரங்குகளிடமிருந்து
விடுவியுங்கள். ஏனெனில் எனக்கு மந்திரம் போனாலும்
குரங்குகள் போகாதோ என்று பயமாக இருக்கிறது. எனக்கு
மனைவியும் வயதான தகப்பனாரும், சிறு குழந்தைகளும்
உள்ளனர். நான் அவர்களை கவனித்தாக வேண்டும்.
என்னால் இரவும் பகலும் அந்த குரங்குகளுடன்
சண்டையிட முடியாது.என்று வேண்டினான். 
 குரு,“அந்த மந்திரத்தை நீ என்னிடம் திருப்பி தந்து
விட்டதால் இனிமேல் குரங்குகள் வராது. அவை மிகவும்
நேர்மையான பக்திமான்கள்.என்றார். 
 அந்த மனிதன் சென்று நாலாபக்கமும் பார்த்தபோது
எங்குமே குரங்குகள் தென்படவில்லை. அவன்
ஆச்சரியமடைந்தான்.வீடு சென்று பார்த்தபோது மனைவி
மனைவியாகவே தோற்றமளித்தாள். தகப்பனார்
தகப்பனாராகவே தோன்றினார். குழந்தைகள்
குழந்தைகளாகவே இருந்தனர். அவன் இது
விநோதம்தான் என்று குளித்தான். குளியலறை
காலியாகவே இருந்தது!அந்த மந்திரம் சிறியதுதான்,
குரு எழுதிக்கெரடுத்த மந்திரத்தை நான் திருப்பித்
தந்து விட்டாலும் கூட, அதை இரவு முழுவதும்
கூறியபடியிருந்ததால் எனக்கு அது நினைவிருக்கிறது.
இப்போது எந்த ஆபத்துமில்லை.... நான் கூறிப்
பார்க்கிறேன்.என்று நினைத்தான்.
 அவன் ஓம் என்று துவங்கிய கணமே, ஓரு குரங்கு
தோன்றிவிட்டது. கூடவே இரண்டு குரங்குகள் சுற்றி
அமர்ந்து ஓம் என்றன. அந்த எண்ணம் முழுவதையும்
கைவிட்டுவிட்டான். அவன் நான் கடைக்குப் போய்
என் வேலையைப் பார்க்கிறேன். இந்த அதிசயங்களை
நிகழ்த்தும் எண்ணம் இனிமேல் சரியாக வராது என்றுபோய்விட்டான்.                          

புதன், 26 செப்டம்பர், 2012

முல்லாவின் அனுபவம்

முல்லா தனது வீட்டின் கூறை மேல் ஏதோ ரிப்பேர் வேலை செய்து கொண்டிருந்தார் அப்போது ஒரு சாமியார் அவரை கீழே வருமாறு அழைத்தார் , முல்லா மிகவும் சிரமப்பட்டு கீழே வந்து அவரிடம் என்ன விசயம் எதற்க்காக என்னை கிழே வருமாறு அழைத்தீர்கள் எனக்கேட்டார்.

அந்த சாமியார் நான் உன்னிடம் ஏதாவது தானமாக பெற வந்துள்ளேன்! அதை சத்தமாக கேட்க வெட்கமாக இருந்தது! அதனால்தான் உன்னை கீழே அழைத்தேன் , மன்னிக்கவும் என்றார்

உடனே முல்லா எடுப்பது பிச்சை இதில் போலி கவுரவம் வேறு ! சரி பரவாயில்லை என்னுடன் வாஎன்று சொல்லிவிட்டு மீண்டும் கூறை மேல் ஏறினார். 

அந்த சாமியாரும் தனது மிகவும் தடித்த உடலை கஷ்டப்பட்டு தூக்கமுடியாமல் தூக்கிக்கோண்டு முல்லாவை தொடர்ந்தார்

சாமியார் மேலே வந்து சேர்ந்ததும் , முல்லா மீண்டும் தனது வேலையை பார்க்கத்தொடங்கினார்.

சாமியார் எனக்கு என்ன தருகிறீர்கள் ? “ எனக் கேட்டார் சற்று பொறுமை இழந்தவராக
முல்லா என்னிடம் கொடுப்பதற்க்கு ஒன்றும் இல்லை, sorry ! “ என்றார்

சாமியார் முட்டாள் ! இதை கீழேயே சொல்லித்தொலைக்க வேண்டியதுதானே, ஏன் என்னை இவ்வளவு கஸ்டப்பட வைத்து மேலே அழைத்தாய் !

முல்லா என் பக்கத்து வீட்டுக்காரன் இருந்தான் அவன் முன்னே ஒன்றும் இல்லை என சொல்ல வெட்க்கமாக இருந்தது அதான்- மற்றும் நான் கீழே வரப் பட்ட அனுபவத்தையாவது ( கஷ்டத்தையாவது) உனக்கு தானமாக கொடுக்கலாம் என்று உன்னை அழைத்தேன்! ஹீ ஹி… “ என்றார்

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

புண்ணியம்


ஒரு ஊரின் பாதை வழியே ஒருவன் நடந்து சென்று கொண்டிருக்கும்போது. அவ்வழியே இருந்த கிணற்றில் தவறுதலாக விழுந்துவிடுகிறான். விழுந்தவன் மேல ஏற முடியாமல் கத்துகிறான்...யாரும் வரவில்லை சிறிது நேரம் போனதும் அந்த வழியே இந்து மதத்தை பின்பற்றுபவன் ஒருவன் வருகிறான். அவன், கூக்குரல் கேட்டு கிணற்றில் எட்டி பார்கிறான்...... "அட பாதாக இப்படி விழுந்துவிட்டாய்யே போன பிறவியில் நீ என்ன பாவம் செய்தாயோ இந்த பிறவியில் சாவ போகிறாய் உன் ஆத்மா சாந்தியடையட்டும்" என்று சொல்லிவிட்டு போய்விடுகிறான். இன்னும் கொஞ்சம் நேரம் போனபின் சீனன் ஒருவன் வருகிறான். அவன், "நான் கன்பூயுசத்தை பின்பற்றுபவன். இந்த கிணற்றை சுற்றி சுவர் எழுப்பவேண்டும் எழுப்பாமல் விட்டது மனிதனின் தவறு அடுத்த முறை இந்த தவறு ஏற்படாமல் நான் பார்த்துகொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறான். அதன் பின் அவன் அழுகுரல் கேட்டு ஒரு பாதிரியார் வருகிறார். அவர் கிணற்றில் விழைந்தவன் அழுகுரல் கேட்டு மிகவும் பதற்றம் அடைகிறார். "நான் காப்பாற்றுகிறேன் அன்பரே கவலை அடையாதே" என்று சொல்லி ஒரு கயிர விட்டு விழுந்தவனை காப்பாற்றுகிறார். அவன், "நான் உயிர் பிழைத்தேன் யாருமே என்னை காப்பாற்றவில்லை நீங்கள் தான் என்னை பிழைக்க வைத்தீர்கள் இந்த நன்றியை நான் மறக்கமாட்டேன்" என்றான். அதற்கு பாதிரியார், "இது எங்கள் மதத்து கடமை அப்பா யார் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்களோ அவர்களை நீ காப்பாற்றுவாயாக அப்போதே உனக்கு புண்ணியம் ஏற்படும். என் இராச்சியத்தில் சீக்கிரம் புகுவாய்" என்று பைபிளில் வாசகம் உள்ளது. அதனால் காப்பாற்றினேன். "இனிமேல் நீ எப்போதெல்லாம் விழுவாய் என்று எனக்கு முன்பே சொல்லிவிடு நான் வந்து உன்னை காப்பாற்றுகிறேன். பின்பு எனக்கு புண்ணியம் அதிகரித்து இறைவன் இராட்சியத்தில் சீக்கிரம் இடம் கிடைக்கும்" என்று சொல்லிவிட்டு செல்கிறார்.
மக்கள் புண்ணியம் அடைவதற்குதான் மற்றவர்களுக்கு பல உதவிகள் செய்யபடுகிறது. எல்லா உதவிகளும் சுயதேவையை பொறுத்தே அமைகிறது..

சனி, 8 செப்டம்பர், 2012

ஓஷோவின் வாழ்வில்


ஒருமுறை ஓஷோவின் இளமை காலவாழ்வில் அவர் வாழ்ந்த பகுதியில் புராண நாடகங்கள் நடக்கும். இவர் நாடக நடிகர்களுடன் நல்ல நட்புடன் பழகிவந்தார். அவர்களின் நடிப்பில் சில மாற்றங்கள் செய்ய சொல்லி மக்களை சிரிக்க வைத்து கண்டு ரசிப்பார். இது நாடகம் நடத்துபவர்களுக்கு பெரும் இன்னலாக இருக்கும். அவர் தந்தையிடம் ஓஷோவை பற்றி சொல்வார்கள். அதனால் நாடக நடிகர்கள் இவருடன் பழகுவதை நாடகம் நடத்துபவர்கள் விரும்பவில்லை. அதனால் இவர் நாடக நடிகர்களின்  தொடர்பு இல்லாமல் இருந்தார். ஓஷோவின் வீட்டிற்கு தட்சர் ஒருவர் வருவார். ஓஷோவின் வீட்டில் உள்ள மரவேலைகளை எல்லாம் அத்தட்சர்தான் செய்வார் அவர் ஒரு நாட நடிகரும் கூட இதை ஓஷோ தெரிந்து அவரிடம் "நான் சொல்வதை நீங்க கேட்பிங்கள" என்று கேட்க அதற்கு "அவர் தாரளமாக கேட்கலாம்" என்ன விவரம் என்று கேட்டதற்கு... நீங்க இன்று நடக்கும் நாடகத்திற்கு போகும்போது நான் சொல்வதை மட்டும் செய்தால் போதும் என்றார். அப்படியே செய்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

அன்று அவ்வூரில் நாடகம் நடக்கிறது. என்ன நாடகம் என்றால் இராமாயணயத்தில் வரும் கதையில் லட்சுமணன் எதிரின் விஷஅம்பு பட்டு மயக்கத்தில் சாகும் நிலையில் இருக்கிறார். இதை பார்த்த ராமனுக்கு பெரும் கவலை மருத்துவர் சஞ்சீவி மூலிகை இருந்தால் இவரை காப்பாற்றிவிடலாம் என்று சொல்கிறார். இதை கேட்ட அனுமன் அதை எப்படி கண்டுபிடிப்பது என்று கேட்கிறார். அதற்கு மருத்துவர் அது அருணாசல பர்வதமலையில் இருக்கிறது அது இருளில் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும் அதுதான் அந்த மூலிகை அதை பறித்துக்கொண்டு வா என சொல்கிறார். அதை கேட்டு அனுமன் பறந்து சென்று  மூலிகை எதுவென்று தெரியாமல் மொத்த மலையே பெயர்த்துகொண்டு வருவார். அதுதான் அப்போது நடக்கும் கதை.  அட்டையில் செய்யப்பட்ட மலைபோன்றதில் மெழுவர்த்தி கொளுத்தபட்டு அதை அனுமன் தூக்கி கொண்டு வரும் போது அந்த தச்சர் அனுமனை கயிரு முலம் இழுக்கவேண்டும். ஆனால் தச்சரிடம் ஓஷோ சொல்கிறார் "நீங்க பாதி இழுத்து அப்படியே இருந்திடுங்க அதுக்கு மேல இழுக்காதிங்க" என்று அவரும் அதையே செய்கிறார்.

இச்சம்பவத்தை ஓஷோ சொல்கிறார்:

இப்போது லட்சுவணன் அடிபட்டு சாக இருக்கிறான். இராமன் சோகமாக பக்கத்தில் நிற்கிறான். ஆனால் வர வேண்டிய அனுமன் பாதிலே தொங்கிக்கொண்டு இருக்கிறார். இதை பார்த்த மக்களுக்கு ஒரே சிரிப்பு இதை அறிந்த நாடக மேனஜர் ஓடிவந்து கயிறை வெட்டி விடுகிறார். அனுமன் தொப்பென்று கிழே விழுந்து கோவம் அடைகிறார்.  ஆனால் இராமன் தான் பேசவேண்டிய வசனத்தை திரும்ப திரும்ப சொல்லிகொண்டே இருக்கிறான்.

அனுமனே, என் பக்தி நிறைந்தவனே நண்பனே" என்று..

அனுமனோ, "உன் நண்பர்கள் நாசமாய் போக! எனக்கு எலும்பு முறிந்துவிட்டது" என்றான். ஆனால்  இராமன் அதே வசனத்தை சொல்லிகொண்டே இருந்தான்.  "என் தம்பி செத்துகொண்டிருக்கிறான்" என்று...

அதற்கு அனுமன், அவன் சாகட்டும் எனக்கு ஒன்று தெரியவேண்டும் யார் கயிறை அறுத்தது என்று அவன நான் கொல்லாமவிடமாட்டேன்! என்று கத்தினான். இதை பார்த்த மக்கள் வயிறு குலங்க சிரித்தார்கள். அவர்கள் சிரித்த சிரிப்பை கண்டு நான் மகிழ்ந்தேன். பின் என் தந்தையிடம் சென்று என்னை பற்றி பெரிய நாடகமே நடந்தது... 

"
பழைய பாரம்பரிய மதவாதிகளுக்கு சிரிப்பை ஏற்றுகொள்வது சிரமம்தான் மாதா கோயிலில் நீங்கள் சிரிக்கவே முடியாது. மதங்களுக்கு மதபண்பு வேண்டும். சில பண்புகள் காணப்படவே இல்லை அவற்றில் மிக மிக முக்கியமானவை நகைச்சுவை உணர்வு...
ஒரு மனநல மருத்துவரிடம் ஒரு பெண்மணி தன் மகன் சிறு வயதில் இருந்தே இன்றுவரை படுக்கையிலே சீறுநீர் கழிக்கிறான் நீங்கள்தான் அவனின் பிரச்சனையாய் தீர்க்கவேண்டும் என்று சொல்கிறார். அவர் அப்பிரச்சனையை தீர்த்தாரா..என்று தெரியவில்லை ஆனால் அதை பற்றி ஆழ்ந்து சிந்திக்க தொடங்கிவிட்டார்.      

இதை போன்றே ஒரு பிரச்சனையை ஓஷோ அவர்களிடம், ஒரு பெண்மணி " ஐயா, என் மகன் எப்போதும் விரல் சூப்புகிறான். இப்படி வளர்ந்து கல்யாணம் பண்ற நிலையில் இருக்கிறான் இன்னும் விரல் சுப்பிகிட்டே இருக்கான் .எனக்கு ரொம்ப கவலையா இருக்கு" என சொல்கிறார். அதற்கு ஓஷோ, "நீ ஏம்மா கவலை படுகிறாய் நீ சீக்கிரம் அவனுக்கு கல்யாணம் செய்துவை அப்புறம் ஏன் விரலை சப்ப போகிறான், இப்பொழுது இருக்கிற பழக்கம் அப்பொழுது மறைந்துவிடும் கவலைபடாதே" என்றார்.