my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

புதன், 29 ஆகஸ்ட், 2012

முக்தி

 போதிவனத்தில் தியானத்திலிருந்த புத்தரைத் தரிசிப்பதற்காக நடுத்தர வயதுடைய ஒருவன் காத்திருந்தான்.
புத்தர் தியானம் கலைந்து கண் விழித்தார்.
புத்தரை வீழ்ந்து வணங்கினான். புத்தர் அவனிடம் " நீ யார் ? " என்று வினவினார்.
அவன் " என் பெயர் அபிநந்தன் " என்றான்.
புத்தர், " உனக்கு என்ன வேண்டும் ? " என்று கேட்டார்.
அபிநந்தன், " பெருமானேநான் ஒரு ஏழை. எனக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கிறார்கள். நான் உலகப் பற்றிலும்உலக வாழ்க்கையிலும் உழன்று ஏராளமான துன்பங்களையும் சித்ரவதைகளையும் அனுபவித்து விட்டேன். என்னை சந்நியாசியாக்கிப் பந்த பாசங்களிலிருந்து விடுவித்து ஞானம் அருளுங்கள். " என்றான்.

புத்தர் சிறிது யோசித்து அவனிடம், " அபிநந்தா இந்த மரத்திலுள்ள இலைகள் ஆடுகின்றன. காரணம் என்ன தெரியுமாகாற்று இலைகள் மீது மோதுவதால் மரத்திலுள்ள இலைகள் ஆடுகின்றன. மனித மனங்கள் இந்த இலைகளைப் போன்றவை. மனித மனங்கள் மீது உலகப் பற்று என்கிற காற்று வந்து மோதுகிறது. அதனால் மனங்கள் ஆடுகின்றன. அலைபாய்கின்றன. முதலில் உன் மனத்திலுள்ள பந்த பாசங்கள் அனைத்தையும் உன்னால் நீக்கிவிட முடியுமா? " என்று கேட்டார்.
அபிநந்தன், " புத்த பெருமானே என்னால் பந்த பாசங்களைத் துறந்து விட முடியும் " என்றான்.

சரி அப்படியானால் நீ இன்று முதல் போதி வனத்திலேயே தங்கலாம். " என்றார் புத்தர்.
சில நாட்கள் கடந்தன.
ஒரு நாள் புத்தர் அருகிலுள்ள குளத்திற்கு நீராடுவதற்காகச் சென்றார். அப்போது அவர் ஒரு மரத்தின் கீழ் அபிநந்தன் பக்கத்தில் ஒரு நாய்க் குட்டி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.
புத்தர் அவனிடம், " அபிநந்தாஇது ஏது? " என வினவினார்.
அபிநந்தன், " பெருமானேஇது என் நாய்க்குட்டி. இது என்னை விட்டு அகல விரும்புவதே இல்லை. எப்போதும் என்னுடனேயே இருக்க விரும்புகிறது. ஆதலால் இதை மட்டும் என்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்." என்று கூறி இழுத்தான்.
புத்தர் சிரித்துக் கொண்டே அங்கிருந்து சென்றார்.
மேலும் சில நாட்கள் கடந்தன. புத்தர் முன்பு போலவே நீராடச் சென்று கொண்டிருந்தார்.
இப்போதும் அபிநந்தன் அதே மரத்தடியில் நின்றிருந்தான். அவன் அருகில் நாய்க்குட்டியுடன் ஒரு சிறுவனும் நின்று கொண்டிருந்தான்.
புத்தர் " அபிநந்தாஇந்தச் சிறுவன் யார் ? " எனக் கேட்டார்.
அபிநந்தன், " ஐயனேஇவன் என் மகன். இவன் இந்த நாய்க் குட்டியுடன் எப்போதும் இருக்க விரும்புகிறான். இவனால் இந்த நாய்க்குட்டியை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. ஆதலால் இவனையும்..." என்றான்.
புத்தர் மீண்டும் சிரித்தவாறு அங்கிருந்து சென்றார்.
மேலும் சில நாட்கள் கடந்தன. அன்றைய தினம் புத்தர் நீராடக் குளத்திற்குச் சென்று கொண்டிருந்தார்.
குளத்தின் கரையிலிருந்த அதே மரத்தடியில் முன்பு போலவே அபிநந்தன் நின்று கொண்டிருந்தான். அவனருகில் நாய்க்குட்டிசிறுவன் ஆகியவர்களுடன் ஒரு பெண்ணும் நின்று கொண்டிருந்தாள்.
புத்தர்," அபிநந்தாயார் இந்தப் பெண் ? " என்றார்.

பெருமானேஇவள் என் மனைவி. இவளால் இந்தச் சிறுவனை விட்டுப் பிரிந்திருக்க முடியவில்லை. ஆதலால் இவளும்..." என்று கூறி இழுத்தான்.
புத்தர் சிரித்துக் கொண்டே இரண்டு காலிப் பாத்திரங்களை எடுத்தார்.

அபிநந்தாஇதோ பார் " என்று சொல்லிக் கொண்டே அவர் ஒரு பாத்திரத்தில் கற்களைப் போட்டு நிரப்பினார். அதைக் குளத்து நீரில் விட்டார். அந்தப் பாத்திரம் குளத்தில் மூழ்கியது.
மற்றொரு காலிப் பாத்திரத்தைக் குளத்து நீரில் விட்டார். அது மிதந்து சென்றது.

அபிநந்தா கனமான பாத்திரம் குளத்தில் மூழ்கி விட்டது. காலிப் பாத்திரம் குளத்தில் மிதந்து செல்கிறது. கனமான பாத்திரம் என்பது பந்த பாசம் எனும் உலகப் பற்று நிறைந்த பாத்திரம். அது பிறவித் துன்பங்கள் என்ற கடலில் மூழ்கிறது. காலிப் பாத்திரம் என்பது ஞானப் பாத்திரம். அது மூழ்காமல் மிதந்து செல்கிறது.
தலையிலிருந்து சில கேசங்கள் தாமாக உதிர்ந்து விடுகின்றன. அவ்விதம் உதிர விரும்பாத கேசங்கள்தலையில் இருந்து கொண்டே நரைத்து நம்மைக் கேலி செய்கின்றன. உதிர்ந்த கேசங்கள் ஓடி விடுகின்றன.
உலகப் பற்று இல்லாதவர்கள் உதிர்ந்த கேசங்களைப் போன்றவர்கள். பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டவர்கள் உதிர விரும்பாமல் தலையில் நரைத்து நம்மைக் கேலி செய்கிற கேசங்கள் போன்றவர்கள். விலக்க முடியாத பந்த பாசங்கள்உதிர விரும்பாத தலையில் உள்ள நரைத்த கேசங்கள் போன்றவை.
உனது மனம் உலகப் பற்றிற்காகவே படைக்கப் பட்டிருக்கிறது. அதற்கு விலையாக நீ உலகத் துன்பங்களையும்சித்ரவதைகளையும் அனுபவித்தேத் தீர வேண்டும். நீ இங்கிருந்து செல்லலாம்போய் வா " என்றார் புத்தர்.

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2012

ஒரு செய்தி


விமானம் நடுவானத்தில் பறந்து கொண்டிருந்த போது,பயணிகள் பார்த்து விமானி கூறினார்,
"பயணிகளுக்கு ஒரு வருத்தமான செய்தியைத் தெர்வித்து கொள்கிறேன்.நம் விமானத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது .கடவுள் மட்டுமே நம்மைக் காப்பாற்ற முடியும்.

ஒரு பயணி தன பக்கத்திலிருந்த துறவியை பார்த்து,
விமானி என்ன கூறுகிறார்?என்று கேட்டபோது
,துறவி அளித்த பதில் :
நாம் உயிர் பிழைக்க வழியே இல்லை". 

சனி, 11 ஆகஸ்ட், 2012

அன்பு

அன்பு அறிவில் பிறப்பதில்லை,
அது உழைத்துச் சேர்ப்பதில்லை,
அது தேடி அடைவதில்லை,
அது அதிர்ஷ்டப் பரிசுமில்லை,
அது கொடுத்துப் பெறுவதில்லை,
அது வயதில் வளர்வதில்லை.

அன்பு நீ பிறக்கும்போதே இருந்தது,
நீ மூச்சு விடுவதில் வாழ்வது,
உன் இதயத் துடிப்பில் ஒலிப்பது, 
உன் இன்பச் செயல்களில் ஒளிர்வது.

அன்பு உன் மென்மையின் உறுதி,
உன் படைப்பின் பெருமிதம்,
உன் இருப்பின் அழகு.

அன்பு வாழ்வின் பயிர்,
அதில் வாழ்வதே உயிர்.

ஆகவே

அன்பைத் தேடாதே,
தயவுசெய்து அதைப் பழகாதே,
அதைப் பற்றிப் படிக்காதே,
அன்பைப்பற்றி அறிவுரை கேட்காதே,
அது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறையல்ல.

இப்படித்தான் அன்பு அழிந்தது, அழிகிறது.

குழந்தையிடம் நிறைந்திருக்கும் அன்பை முறைப்படுத்தும் முயற்சியில்,
அறிவுச்சிறையிலிட்டுத்தான் அன்பு அடியோடு அழிகிறது.
அன்பு அழிந்ததால்.....வாழ்வு அர்த்தம் இழந்தது,
இயற்கை அழகு குலைந்தது.
மனிதன்....... வெறும் இயந்திரமாகிப் போனான், தந்திரமாகிப் போனான்.

எனதருமை நண்பனே,
அன்பில் நீ
அமிழலாம், கரையலாம், உணரலாம், இருக்கலாம்,
ஆனால்..... சொல்ல முடியாது.
அது சொற்சிறை கடந்த அனுபவம்,
காட்ட முடியும்......ஆம்.....தொட்டுக் காட்டலாம்.

என் இதயமே
எட்ட இருந்து பார்க்கக்கூடிய பொருளல்ல அன்பு,
கிட்டே நெருங்கி வா,
கூடிக் குலாவி அன்பில் குதூகலிப்போம்.
அன்புடன் ,
ஓஷோ 

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

ஒரே ஒரு பாட்டு


ஒரு மூறை சங்கராச்சார்யா பம்பாயில் உறை ஆற்றிக்கோண்டிருந்தார்அவருக்கு முன்னால் ஒரு மிகப்பணக்காரப் பெண்மணி அவரது குழந்தையுடன் அமர்ந்திருந்தார். அந்த குழந்தை “ நான் ஒன்னுக்கு போகனும் ! ஒன்னுக்கு போகனும் “ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தது. சங்கராச்சார்யாருக்கு மன்டை காய்ந்தது ஏனேனில் அவர் மிக முக்கியமான ( ? ) சொற்பொழிவை ஆற்றிக்கொண்டிருந்தார்ஒவ்வொறு முறை அந்த குழந்தை அவ்வாரு சொல்லும் போதும் சபையில் உள்ளவர்களாள் சிரிப்பை அடக்க முடியவில்லை மிகவும் தொந்திரவாக இருந்ததுமேலும் அந்த குழந்தை “ என்ன அனுமதிக்காவிட்டால் நான் இங்கியே ஒன்னுக்கு போயிருவேன் என்னால் அடக்க முடியவில்லை” என்று அழுக ஆரம்பித்தது.
கடைசியாக அந்த சொற்பொழிவை சங்கராச்சாரியார் சீக்கிரமே முடிக்க வேண்டியது ஆயிற்று. அவர் அந்த பெண்மணியை தனியாக அழைத்து சொன்னார் “ முதலில் அவனுக்கு நல்ல கலாச்சாரத்தை கற்றுக்கொடு! அவனால் இன்று மிக த் தொந்திரவு ஆகிவிட்டது “ என அறிவுறுத்தினார்.
உடனே அந்த ப் பெண்மணி “ என்ன பன்னறது சாமி நான் எங்கு போனாலும் வருகிறேன் என்று அடம் பிடிக்கிறான் ! அப்படி வந்தாலும் நம்ப நேரம் அவனால் உக்கார முடியாது ! இப்படி ஒன்னுக்கு போகனும் என்று ஆரம்பித்துவிடுகிறான் என்றாள்
சங்கராச்சாரியார் “ நீ அவனிடம் இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அவன் பாட்டு பாடவிரும்புவதாகச் சொல்லச் சொல் அவ்வாறு சொன்னால் சபையில் இருக்கும மற்ற யாருக்கும் தெரியாது. அதனால் எந்த இடையூரும் இருக்காது இப்படி சபையில் ஒன்னுக்கு போகனும் என்று அசிங்கமாக கேட்டு கொண்டிருக்க மாட்டான் “ என்றார்.
சில மாதங்கள் கழித்து சங்கராச்சாரியார் அந்தப் பெண்மணியின் வீட்டில் தங்க நேர்ந்தது அந்த பெண்மனி சங்க்ராச்சாரியிடம் “ சுவாமி ! தற்ச்செயலாக நான் ஒரு நெருங்கிய சொந்தக்காரரின் மறைவிற்க்கு செல்ல வேண்டியுள்ளது காலை எப்படியும் வந்து விடுவேன் இந்த குழந்தை என்னிடமோ அல்லது அவனது அப்பவிடமோ மட்டும் தான் துங்கி பழக்கமுள்ளவன் நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் இவனை தங்கள் அருகிலே இன்று இரவு வைத்திருக்கமுடியுமா ? “ எனக் கேட்டார்
சங்கராச்சாரியார் “ ஒரு பிரச்சனையும் இல்லை ! அவன் என்னிடமே இருக்கட்டும் ! “ என்றார்.
நடு இரவில் பிரச்சனை வந்தது அந்த குழந்தை “ நான் பாட்டு பாடவேண்டும் என தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.
சங்கர் “ முட்டாள்! நடு இராத்திரியில் என்ன பாட்டு வேண்டி கிடக்கிறது ! என்னட தூக்கத்தை கெடுத்ததில்லாமல் மற்றவர்களின் தூக்கத்தையும் கெடுத்துவிடுவாய் எல்லாம் காலையில் பார்த்து கொள்ளலாம் இப்ப பேசம ப் படு “ என்றார்
குழந்தை “ முடியாது நான் இப்பவே பாட வேண்டும் பாட்டு அடக்கமுடியாமல் பீறீட்டுகொண்டு வேகமாக வருகிறது என்னால் ஒரு நிமிடம் கூட பொறுக்கமுடியாது ! “ என்றது
சங்கர் “ என்னட இது உன்னோட தொந்தரவாப் போச்சு ! இது தான் முதல் முறை நான் கேட்பது பாட்டு வேகமாக பீறீட்டு கொண்டு வருவதை ! அமாம் யாரோட பாட்டு ( யார் பாடிய பாட்டு என்ற அர்த்ததில் ) “ எனக் கேட்1டார்
குழந்தை “ என்ன கேள்வி இது ! என்னோட சொந்த பாட்டு “ என்றது
சங்கர் “ அப்படியேன்றால் அது பகவான் பாடலாகத்தான் இருக்கும் சரி எனது காதில் மெதுவாகப் பாடு ! மற்றவர்களின் உறக்கமும் கெடாது எனச்சொன்னார்
குழந்தை “ நீங்கள் சொல்வதால் நான் செய்கிறேன் !என்னோட அப்பா அம்மாகிட்ட சொல்லக்கூடாது !” என்றது
சங்கர் “ பாட்டுமட்டும்தான பாடப்போகிறாய் வேறு ஏதாவது செய்யப் போகிறாய எனக் கேட்டார்
குழந்தை “ சுத்தமான பாட்டு மட்டும் தான் “ என்றது
சங்கர் அப்படியென்றால் உடணடியாக பாடிவிட்டு படுத்துவிடு “ என்றார்
குழந்தை காதில் அழகாகப் பாடியது சங்கராச்சாரியார்க்கு அது பாட்டு என்று இவ்வளவு நேரம் சொல்லிக்கொண்டிருந்தது எது என்று புரிந்தது  ஓஷோ

சனி, 4 ஆகஸ்ட், 2012

அப்பாவி (முட்டாள் )மனிதன்


ஒரு பயணி, ஒரு புகை வண்டியிலிருந்து வெளியே வந்தான். அவனை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் அவள் என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள் ?” என்று கவலையோடு கேட்டாள்.
அவன்,“ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும் திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன் . அது எனக்குத் தலைவலியை ஏற்படுத்திவிட்டது.என்றான்
அவள் நீங்கள் யாரிடமாவது கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே. உங்களுடைய நிலைமையை விளக்கிச்சொல்லி இருக்கலாமே ?”
அவன் , “ நான் அப்படித்தான் நினைத்தேன் ஆனால், என் முன் சீட்டில் ஒருவரும் இல்லை , நான் யாரிடம் கேட்பது?” என்றான்

திங்கள், 23 ஜூலை, 2012

கடவுளின் நிலை


இந்த சமுதாயமே அறிந்த ஒரு குற்றவாளி கோயிலுக்கு சென்றான்.ஆனால் கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.கோவிலின் வெளியே நின்றபடி கடவுளை வேண்டினான்.கடவுளே நான் குற்றவாளி என்ற காரணத்தால் உன்னை தரிசிக்க விட மறுக்கிறிர்கள் என்று கண்ணீர் மல்க வேண்டினான்.
உடனே ஒரு குரல் ஒலித்தது அதற்காக ஏன் கவலைபடுகிறாய்.அவர்கள் என்னையே உள்ளே அனுமதிப்பது இல்லை என்று கடவுள் கூறினர் 

பணம்----------2


பணம் ஓரு பிரச்சனை அல்ல! அதனை உபயோகபடுத்தலாம்.
உன்னிடம் அது இருந்தால் உபயோகப்படுத்து ; உன்னிடம் பணம் இல்லாவிட்டால், பணம் இல்லாதபோது உனக்கு இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்து. இதுதான் என்னுடைய வழிமுறை. நீ பணக்காரனாக இருந்தால் ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் அனுபவிக்கமுடியாத சில இன்பங்களை செல்வம் கொண்டுள்ளது. நான் செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், நான் உண்மையாக கூறுகிறேன், பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய ஓரு சில விஷயங்கள் இருக்கின்றன. உன்னிடம் செல்வம் இருக்கும்பொழுது ஆனந்தமாக அனுபவி. நான் திரும்பவும் உன்னிடம் கூறுகிறேன், நான் 
செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், ஏழை மக்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய விஷயங்கள் சில இருக்கின்றன. இரண்டையும் ஓரே சமயத்தில் அனுபவிக்கமுடியாது.
எனவே எப்போதானாலும், நடப்பது என்னவாக இருந்தாலும், ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் ஓரு வகையான சுதந்திரத்தைக் கொண்டுள்ளான். வறுமை ஓரு வகையான தூய்மையை, ஓரு ஓய்வுதன்மையை, திருப்தியான தன்மையை கொண்டுள்ளது. மனம் மிகவும் 
கவலைபடுவதில்லை. கவலைபட ஏதுமில்லை, நீ நிம்மதியாக உறங்கலாம். ஏழை மனிதனுக்கு தூக்கமின்மை இயலாதது. எனவே குறட்டை விட்டு நன்றாக தூங்கு. ஏழ்மையிலிருந்து வரும் சுதந்திரத்தை ஆனந்தமாக அனுபவி.
சில சமயங்களில் நீ செல்வந்தனாக இருந்தால், செல்வத்தை அனுபவி, ஏனெனில் பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய சில . சிறந்த ஓவியங்களை உனது சுவற்றில் நீ மாட்டலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உனது வீட்டில் 

நீ சிறந்த இசையை வைத்திருக்கலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உன்னுடைய வீட்டை சுற்றி நீ ஜென் தோட்டம் அமைக்கலாம், ஏழை அவ்வாறு செய்ய இயலாது. நீ கவிதை படிக்கலாம், நீ வரையலாம், நீ கிதார் வாசிக்கலாம், நீ ஆடலாம்பாடலாம், தியானம் செய்யலாம் ஆயிரக்கணக்கான விஷயங்கள் கிடைக்கின்றன.
என்னுடைய வழி: எது எப்படியிருந்தாலும், நீ அதன் மூலம் என்ன செய்யமுடியும் என்று பார். அது வறுமையாக இருக்குமானால் புத்தராக ஆகிவிடு. ஊர் சுற்றத் தொடங்கு, ஓரு பிச்சை பாத்திரத்தை எடுத்து கெரள். 

பிச்சைக்காரருக்கு மட்டுமே இருக்ககூடிய அந்த அழகை அனுபவி. அவர் எந்த இடத்தையும் சேர்ந்தவரல்ல, இன்று இங்கே இருக்கிறார், நாளை அவர் போய்விடுவார். அவர் ஓரு ஓட்டம். அவருக்கு எந்த வீடும் இல்லை. மழை வரபோகிறது கூரையை சரிசெய்யவேண்டும் என்ற கவலை அவருக்கு இல்லை. யாராவது எதையாவது திருடிவிடுவார்களோ என்னும் பயம் அவருக்கு இல்லை. அவரிடம் எதுவும் இல்லை.
வறுமையாக இருக்கும்பொழுது வறுமையை ஆனந்தமாக அனுபவி. செல்வம் இருக்கும்பொழுது ஜனகராக ஆகிவிடு, அரசனாக ஆகிவிடுபணத்தினால் கிடைக்கும் அனைத்து அழகுகளையும் அனுபவி.
என்னுடைய வழி முழுமையானது. நான் உனக்கு தேர்ந்தெடுக்க கற்றுத் தரவில்லை, நான் வெறுமனே ஓரு புத்திசாலியான மனிதன் எது எப்படியிருந்தாலும் அதனை அழகாக்கிவிடுவான் என கூறுகிறேன். புத்தியில்லாத மனிதன் சிரமப்படுகிறான். அவனிடம் பணமிருந்தால் அவன் சிரமப்படுகிறான் ஏனெனில் பணம் கவலைகளை கொண்டுவருகிறது. அவன் பணம் கொண்டுவரக்கூடிய இசையைநடனத்தை, ஓவியத்தை இரசிப்பதில்லை. அவனிடம் பணம் இருந்தால் அவன் ஓய்வெடுக்க, தியானம் செய்ய, பள்ளதாக்குகளில் கத்திப் பாட, மற்றும் நட்சத்திரங்களோடு பேச அவன் செல்வதில்லை, அவன் கவலைபடுகிறான், தனது உறக்கத்தை இழந்துவிடுகிறான், பசியை இழந்துவிடுகிறான். பணம் இருக்கும்பொழுது அவன் தவறானதை தேர்ந்தெடுக்கிறான்.


 இந்த மனிதன் எப்படியோ ஏழையானால், கடவுளின் அருளால் ஏழையானால், பிறகு அவன் ஏழ்மையில் சிரமப்படுகிறான், பிறகு அவன் தொடர்ந்து “அது இல்லை, இது இல்லைஎனக் கவலைப்படுகிறான். உன்னிடம் வறுமை உள்ளது!அதனை ஆனந்தமாக அனுபவி!


நான் பணத்தை எதிர்க்கவில்லை. பணப்பிடிப்புள்ள மனத்தன்மையை தான் எதிர்க்கிறேன்! பொருட்களை வைத்திருப்பதை நான் எதிர்ப்பதில்லை.
நான் பிடித்து வைத்துக் கொள்ளும் தன்மையையே எதிர்க்கிறேன். இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்ட பரிமாணங்கள்ஓன்றுக்கெரன்று எதிரானவை.
பணத்திற்கு எதிராக இருப்பது முட்டாள்தனம். பணம் ஓரு அழகான கருவி- பரிமாற்ற கருவி. பணம் இல்லாமல் முன்னேற்றம் அடைந்த கலாச்சாரமோ, சமுதாயமோ, பண்பாடோ, இருக்கமுடியாது.பணம் உலகில் இருந்து மறைந்துவிட்டது என கற்பனை செய்து பாருங்கள். பிறகு வசதி, வாய்ப்பு அனைத்தும் அதனோடு சேர்ந்து மறைந்துவிடும். மக்கள் மிகவும் வறுமையில் தள்ளப்படுவார்கள். பணம் மிகப்பெரிய பணியை செய்துள்ளது. ஓருவர் அதனை பாராட்ட வேண்டும்.
ஆகவே நான் பணத்திற்கு எதிரியல்ல, ஆனால் நான் பணப்பிடிப்புள்ள மன தன்மைக்கு எதிரானவன்.- மக்கள் வேறுபடுத்துவதில்லை. முழு மனித சமுதாயத்தின் கடந்த காலமும் குழப்பத்திலேயே இருந்து வந்துள்ளது.
பணப்பிடிப்புள்ள மன தன்மையை விட்டுவிடுங்கள். ஆனால் பணத்தை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. பணம் உருவாக்கப்பட வேண்டும், செல்வம் உருவாக்கப்படவேண்டும். செல்வம் இல்லாவிடில் எல்லா அறிவியலும் மறைந்துவிடும், எல்லா தொழில்நுட்பங்களும் மறைந்துவிடும், மனிதனின் சிறந்த சாதனைகள் அனைத்தும் மறைந்துவிடும். மனிதனால் நிலவுக்கு செல்லமுடியாது, மனிதனால் பறக்க இயலாது. பணம் இல்லாவிடில், மொழி இல்லாவிடில் எல்லா கலைகளும், எல்லா இலக்கியங்களும், எல்லா கவிதைகளும், எல்லா இசையும் அழிந்துவிடுவதைப் போல, வாழ்வு உற்சாகம் இழந்துவிடும். மொழி உனக்கு எண்ணங்களை பரிமாறிக்கொள்ள, தெரிவிக்க உதவுவதைப் போல, பணம் உனக்குப் பொருட்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது. அதுவும் ஓருவகை தொடர்புபடுத்திக் கொள்ளுதலேயாகும்.
ஆனால் பண-மனம் படைத்த மக்கள் பணத்தை பிடித்து வைத்து கொள்கிறார்கள். அவர்கள் பணத்தின் முழு பயனையும் அழித்துவிடுகிறார்கள். அதன் பயன் ஓரு கையிலிருந்து இன்னெரரு கைக்கு செல்வதே. அதனால்தான் அது கரன்சி என அழைக்கபடுகிறது, அது மின்சாரத்தைப்(கரண்ட்)போல, இருக்கவேண்டும், நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அது எவ்வளவு நகர்கிறதோ, அவ்வளவு நல்லது. சமுதாயம் அந்த அளவிற்கு செல்வச்செழிப்பு அடைகிறது.
என்னிடம் ஓரே ஓரு ரூபாய் இருந்தாலும் அது நகர்ந்துகொண்டே இருக்கிறது. அது ஐயாயிரம் சந்நியாசிகளிடம் நகரும்பொழுது அந்த ஓரு ரூபாய் ஐயாயிரம் ரூபாய் ஆகிறது. அது அதிகமாக நகர்ந்தால் அதிக பணம் உருவாக்கப்படுகிறது. 

அது ஐயாயிரம் ரூபாய் இருந்ததை போல செயல்பட்டுள்ளது- வெறும் ஓரு ரூபாய் !ஆனால் பண-மனம் படைத்த மனிதன் அதனைப் பிடித்துகொள்கிறான். அவன் அது கரன்சியாக இருப்பதை நிறுத்திவிடுகிறான். அவன் அதனை பிடித்து வைத்து கொள்கிறான். 

அதனிடம் அவன் பிடிப்பு கொள்கிறான், அவன் அதனை உபயோகப்படுத்துவதில்லை