my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

செவ்வாய், 10 ஏப்ரல், 2012

ஓஷோவின் குட்டி கதைகள்


முழு நிலா இரவில் தேன் நிலவில் முல்லாவிடம் அவரது மனைவி கேட்டாள்
முல்லா உனக்கு த் தெரியுமா ? பெளர்ணமி இரவில் கடல்கள் கொந்தளிக்கும் , மனித மனம் பைத்தியகாரத்தனம்மாக வேலை செய்யும் ! கேள்விப் பட்டிருக்கிறாயா ? “

முல்லா நான் கேள்விப்பட்டதில்லை , ஆனால் உன்னை முதல் முதலாக காதலிக்கிறேன் என்று சொன்னது பெளர்ணமி இரவில் தான்என்றார்

உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு!


முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார் , அப்போது நாளிதழில் வந்த ஒரு( கிழ்கண்ட ) விளம்பரம் அவரை கவர்ந்தது

மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு!
1.)
சாதா உடற் இளைப்பு ரூ 1,000/- ஒரு மணி நேரம் ( 2 - 5 கிலோ வரை)
2.).
சூப்பர் ட்ரிம்மர் - ரூ 2,000/- இரண்டு மணி நேரம் ( 6-10 கிலோ வரை)
3.)
ஹெவி ட்ரிம்மர் - ரூ 3,000/- மூன்று மணி நேரம் ( 11 – 15 கிலோ வரை )
4.)
அல்டிமேட் ட்ரிம்மர் - ரூ 10,000/- கால வரையரை இல்லை ( எடை வரையரை இல்லை )

முன்பதிவிற்க்கு முந்துங்கள்

முல்லா அந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்ச்சி செய்து பார்த்துவிடுவது என முடிவேடுத்தார் , ஆனாலும் முதலில் சாதா முறையில் முதலில் பரிச்சிக்க விரும்பி அதற்க்கான பணத்தை கட்டினார். அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார் அந்த அறை 16 x 16 என்ற அளவில் இருந்தது அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார் அவரூடைய கையில் ஒரு அட்டை அதில் ஒரு மணி நேரத்திர்க்குள் என்னை துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம் என்று எழுதியிருந்தது , முல்லா அந்த பெண்னை துரத்த ஆரம்பித்தார் அவருக்கு எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது அவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கனிசமாக குறைந்தது..

முழு திருப்தியுடன் அதற்க்கு அடுத்த முறையை பரிச்சிக்க விரும்பினார் இந்த முறையில் வித்யாசம் அறையின் அளவு 40x40, சாதா முறையைவிட நல்ல அழகான பெண் , கால அவகாசம் 2 மணி அவ்வளவுதான், மற்றபடி முறை ஒன்றுதான் ,இங்கும் அவருக்கு முழுதிருப்தி.

மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார் வித்யாசம் அறையின் அளவு 75x75 , மிக அழகான பெண் , கால அவகாசம் 3 மணி நேரம் , முல்லா கணிசமாக எடை குறைந்திருந்தார் அவருக்கு , எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம் , கடைசியாக அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார், அதற்க்கான பணத்தையும் கட்டினார் ,

வரவேர்ப்பாளர் அவரிடம் 16 வது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார், முல்லாவும் தான் அடையப்போகும் சந்தோசத்தை எண்ணியவரே கஷ்டப்பட்டு 16 மாடிக்கு வந்தார் , அங்கு அவர் 42 வது மாடிக்கு 15 நிமிடத்திற்க்குள் ஓடி வந்து சேர வேண்டும் அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது , முல்லாவிற்க்கு வேறு வழியும் இல்லை , தான் கானப்போகும் மிக மிக அற்ப்புதமான அனுபவத்தை நினைத்தவாரே உயிரைக் கொடுத்து ஓடி 42 வது மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார். அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி அதன் அளவு சுமார் 500x500 அடி பரப்பளவு இருக்கும் , அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான். அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது, முல்லா மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார் அங்கே ஒரு பெரிய மனிதக்குரங்கு நான் உன்னை துரத்திப் பிடித்தால் , என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன் என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் அமைதியாக அமர்ந்திருந்தது

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

ஓஷோவின் குட்டி கதைகள்


முல்லா தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணின் தந்தையிடம் பேசிக் கொண்டிருந்தார்

ஐயா ! நான் உங்களது மகளை திருமணம் செய்துகொள்ளவிரும்புகிறேன்

அந்தப் பெண்ணின் தந்தை அவனைப் பார்த்து கேட்டார் இது நிமித்தமாக எனது மனைவியை பார்த்தாயா ? “

பார்த்தேன் ஐயா ! ஆனாலும் எனக்கு உங்களின் மகளைத் தான் அதிகம் பிடித்திருக்கிறது என்றார் முல்லா

பெண்ணின் தந்தை : ???????????

புதன், 4 ஏப்ரல், 2012

முல்லாவின் கிறுக்குத்தனம்

முல்லாவும் அவரது மனைவியும் ஒரு நாள் தொலைக்காட்சி பார்த்துக்க்கொண்டிருந்தனர் , அதில் ஒரு சுகமளிப்பவர் ( faith healer ) உறை ஆற்றிக்கொண்டிருந்தார் அவர் உங்களின் உடம்பில் ஏதாவது பகுதியை குனப்படுத்தவேண்டும் எனில் , உங்களது ஓரு கையை பாதிக்கப்பட்ட உறுப்பில் வைக்கவும் மற்றொரு கையை இந்த தொலைக்காட்சிப் பெட்டியில் வைத்தால் அந்த உருப்பு ஆண்டவனுடைய கிருபையினாலே குனப்படுத்தப்படும்என்றார்

இதைக் கேட்ட அவரது மனைவி தன்னுடைய கையை தன்னுடைய இதயத்தில் வைத்தாள்.

முல்லாவோ அவசரமாக தனது கையை அடிவயிற்றை நோக்கி கொண்டு சென்றார்
இதை கவனித்த அவரது மனைவி முல்லா ! இவருக்கு பாதிக்கப்பட்ட உருப்பை மட்டுமே குனப்படுத்தவைக்க முடியும். இவரால் இறந்தவைகளை உயிர்த்தெழச்செய்யமுடியாது விட்டுவிடுஎன்றாள்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

ஓஷோவின் குட்டி கதைகள்


ஒரு மன நல விடுதியை பார்வையிட சென்றார் ஒரு மன நல நிபுணர். மன நல விடுதியின் பொறுப்பாளர் அவரை சுற்றி பார்க்க அழைத்து சென்றார். அவரது கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
ஒரு குறிப்பிட்ட நபரை பற்றி அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். அவன் தனது அறையில் கம்பிகளுக்கு பின்னால் நின்று கொண்டிருந்தான். சுவரின் மேல் ஒரு சாதாரண பெண்ணின் படம் இருந்தது. அவன் அதன் முன்னால் கைகளை கூப்பிய வண்ணம் கண்களில் கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்தான். மனநல நிபுணர் இந்த மனிதனுக்கு என்னவாயிற்று? என்று கேட்டார்.
பொறுப்பாளர், அவனை தொந்தரவு செய்யாதீர்கள் என்று சொல்லி, அவரை சற்று தொலைவில் அழைத்து சென்று, அவனை பிரார்த்தனையிலிருந்து யாரும் தொந்தரவு செய்வதை அவன் விரும்பவில்லை. முழு நாளும் அவன் பிரார்த்தனை செய்த வண்ணம் இருக்கிறான் என்றார்.
அந்த படம் யாருடையது? என்று நிபுணர் கேட்டார்.
பொறுப்பாளர் சிரிக்க தொடங்கினார். அது யாருமில்லை ஒரு சாதாரண பெண். அவன் அவளை காதலித்தான். ஆனால் இருவரும் வேறு வேறு சாதிகளை சார்ந்திருந்தபடியால் அந்த பெண்ணின் தந்தை மறுத்து விட்டார். இவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது. அந்த பெண் ஒரு தெய்வமாகி விட்டாள். கிடைக்க முடியாமற் போனதால் ஒரு சாதாரண பெண் தெய்வமாகி விட்டாள். இப்போது அவன் இந்த பிறவியில் நடக்காத ஒன்று பிரார்த்தனையின் மூலம் அடுத்த பிறவியிலாவது நடக்கும் என்று பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறான்.
இந்த மாதிரி ஒரு கேஸை நான் பார்த்ததேயில்லை என்றார் நிபுணர்.

அடுத்த அறையில் மற்றொரு மனிதன் தனது தலையை சுவரில் மோதி கொண்டிருந்தான். அவனை இரண்டு காவலாளிகள் பிடித்து கொண்டிருந்தனர்.
இவனுக்கு என்னவாயிற்று? ஏன் இவன் தனது தலையை சுவரில் மோதி கொள்கிறான்? என்றார் மன நல நிபுணர்.
இவன்தான் அந்த பெண்ணை திருமணம் செய்தவன் என்றார் விடுதி பொறுப்பாளர்.

வெள்ளி, 23 மார்ச், 2012

ஓஷோ முத்துக்கள்

1.யின் – யாங்
 
பிரபஞ்சம் இரண்டுவித சக்திகளால் ஆனது. மேல்மட்டத்தில் இரண்டும் எதிரெதிரானவை, ஆனால் ஆழத்தில் அவை எதிரெதிரானவை அல்ல. இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அவற்றை யின் – யாங் என்றோ, எதிர்மறை – நேர்மறை என்றோ, ஆண் – பெண் என்றோ கூறலாம். உண்மையில் யின் – யாங் எல்லா விதமான எதிரெதிரானவற்றையும் இணைத்துச் செல்கிறது. அடிப்படை உண்மை என்னவென்றால் எதிரெதிரானவை எதிரெதிரானவை அல்ல, முரண்பாடுகளல்ல, அவை ஒன்றோடு ஒன்றோடு இணைந்தவை, ஒன்றை ஒன்று சமன் படுத்துபவை.
 
ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் உள்ள எதிர்மறை சக்தியை கண்டுபிடித்து ஒன்றாக இணைய தியானம் உதவுகிறது.
 
மனிதன் எனபவன் ஆண் பாகமும் பெண் பாகமும் ஒன்றாய் உள்ளே இணைந்தவன்தான்.
 
இந்த உலகின் பிரிவினைகள் அனைத்தும் மனதின் பிரிவினைகள்தான்.
 
யின் – யாங் என்பது ஒரு வட்டம், ஆண் தன்னுள் பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும், பெண் தன்னுள் ஆணை கண்டு பிடிக்க வேண்டும்.
 
அரிஸ்டாட்டிலின் தர்க்கத்தின் அடிப்படையில் மட்டுமே வாழ்க்கை அமைவதில்லை, அதில் இரண்டும் கலந்திருக்கிறது.
 
2.மேல் நோக்கி செல்லுதல்
 
உனது சக்தி மேல் நோக்கி செல்ல ஆரம்பிக்கும்போது புவியீர்ப்பு விசை உனது சக்தியை பாதிப்பதில்லை என எல்லா ஞானிகளும் விளக்கி கூறுகின்றனர். உனது சக்தி வேறொரு விதியின் படி செயல்பட ஆரம்பிக்கிறது, ஒளியின் விதி. நீ மேல் நோக்கி எழ ஆரம்பிக்கிறாய், பின் மனிதனுக்கு ஒரு புதுவிதமான வித்தியாசமான உலகத்தைப்பற்றி தெரிய வருகிறது.
 
ஜென்குரு உன்னை அடிக்கும்போது உனது சக்தி மேல் நோக்கி எழுகிறது, நீ கவனமடைகிறாய்.
 
புத்திசாலித்தனம் மேல் நோக்கி எழுகிறது, அறிவுஜீவித்தனம் கீழ் நோக்கி செல்கிறது.
 
எந்த அளவு உன்னிடம் தன்னுணர்வு இருக்கிறதோ அந்த அளவு உனது சக்தி மேல் நோக்கி பாய்கிறது.
 
குணடலினி என்பது ஒரு மையம், அது சக்தி மேல் நோக்கி எழும்போது செயல்பட ஆரம்பிக்கிறது.
 
தண்ணீரும் மேல் நோக்கி போகும். ஆனால் அதற்கு சிறிதளவு சூடு தேவை, அவ்வளவுதான்.
 
3.அழகு
 
அழகு என்பது அன்பின் உருவாக்கம்தான். அன்பிற்குரியவர் மிக அழகாக தோன்றுவார், அது அன்பு கொண்ட கண் உருவாக்குவது. சாதாரணமாக மக்கள் அடுத்தவர் மிக அழகாக தோன்றியதால் தாங்கள் அன்பில் விழுந்து விட்டதாக நினைக்கின்றனர். உண்மை இதற்கு நேர் எதிரானது. அவர்கள் காதலில் விழுந்து விட்டதால்தான் அடுத்தவர் மிக அழகாக தோன்றுகின்றனர். அன்புதான் அடிப்படை.
 
அழகு உடல் சார்ந்தது மட்டுமல்ல, அடிப்படையில் அது ஆன்மீக ரீதியானது.
 
உனது கண்ணாடியை சுத்தம் செய், உன்னைச் சுற்றி எவ்வளவு அழகு உள்ளது என்று பார்க்க முடியும்.
 
ஒரு படைப்பு செயல் இந்த உலகின் அழகை மேலும் வளப்படுத்தும்.
 
வன்முறையின்றி ஏதாவது நிகழும்போது அது அதற்கே உரிய அழகை கொண்டுள்ளது.
 
எங்கெல்லாம் நீ அழகை பார்க்கிறாயோ அப்போது நீ புனித பூமியில் நிற்பதை நினைவில் கொள்.
 
இறைமையின் முதல் தரிசனம்தான் அழகு.

ஓஷோ முத்துக்கள்

1.       எழுச்சி
 
நான் புரட்சியை போதிக்கவில்லை, நான் எழுச்சியை போதிக்கிறேன். இந்த வேறுபாடு மிகவும் பெரியது. புரட்சி அரசியல்ரீதியானது, எழுச்சி ஆன்மீகரீதியானது. புரட்சிக்கு நீ உன்னை ஒரு ராணுவம் போல ஒருங்கிணைத்துக் கொண்டு எதிரிகளுடன் போராட வேண்டும். எழுச்சி எனில் நீ ஒரு தனிப்பட்டவனாக எதிர்க்க வேண்டும். இந்த பழமை முழுவதிலும் இருந்து நீ வெளி வர வேண்டும்.
 
எழுச்சியின் மூலம் உனது இதயம் ஒரு அன்பு மலராக விரிவடையும்.
 
ஒரு துறவியின் இருப்பில் எழுச்சியின் சுவை இருக்கும்.
 
புத்திசாலித்தனம் சிறந்தது, அதனினும் சிறந்தது எழுச்சி
 
வேரூன்றியுள்ள அனைத்து மதங்களுக்கும் எதிராக மிகப் பெரிய எழுச்சி எழ இதுதான் நேரம்.
 
எழுச்சி எல்லா அடிமைத்தனங்களுக்கும் எதிரானது, வாழ்வை முழுமையான சுதந்திரத்தில்வாழ்வது.
 
உன்னுடைய எழுச்சியில் அன்பின் மணம் இருக்க வேண்டும்.
 
 
2.       உருகுதல்
 
அறியாமல் இருப்பதுதான் மிகவும் அணுக்கமானது. உனக்கும் நிதர்சனத்துக்கும் இடையே ஒரு சிறந்த நட்பு, ஒரு அன்யோன்யம் எழும். சூரியன் வரும்போது பனித்துளி கரைவதைப் போல நீ உருகிப் போவாய். அது நேசஉறவு. நீ நிதர்சனத்துடன் ஒன்றி விடுகிறாய். நிதர்சனம் உன்னுள் ஊடுருவுகிறது. காதலர்கள் ஒருவருக்குள் ஒருவர் ஊடுருவுவதைப் போல.
 
அகம்பாவத்தை விட்டுவிடு. அப்போது நீ மலர ஆரம்பிப்பாய், உருக ஆரம்பிப்பாய் – நீ உயிர்ப்புடன் இருப்பாய்.
 
ஒரு மலரை முழுமையாக கவனி, ஒன்றிவிடுதலையும் உருகுவதையும் நீ அனுபவப்படுவாய்.
 
நீ உண்மையிலேயே ஒருவரை நேசித்தால் உனது ஆணவம் நழுவதையும் கரைவதையும் நீ உணர்வாய்.
 
சிறந்த நடனமாடுபவர்கள் மெதுமெதுவாக அதனுள் கரைந்து உருகி போவார்கள்.
 
நீ அன்பு சக்தியினுள் செல்லும்போது நீ கரைவாய், ஆனந்ததில் மலர்வாய்
 
 
3.       தெளிவு
 
 உனது அமைதியில் வார்த்தைகளின்றி இருக்கும்போது மொழியின்றி இருக்கும்போது யாரும் அங்கு இல்லாத போது நீ பிரபஞ்சத்துடன் லயப்பட்டு விடுகிறாய். இந்த தெளிவு இந்த ஒருமை உனக்கு அளவற்ற பரிசுகளை கொண்டு வரும். அது உனது முழு திறனுடன் நீ மலர உதவும். முதல் முறையாக நீ தனிப்பட்டவனாக உணர்வாய், உனக்கு சுதந்திரத்தின் சுவை தெரியும்.
 
இரவுக்கு அதற்கென ஒரு அழகு உண்டு, அதில் ஆழமும், அமைதியும், தெளிவும் இருக்கும்.
 
உறுதியான தெளிவுடனும் அமைதியுடனும் இருக்கும்போது நீ முழுமையான சுமை குறைந்தவனாக உணர்வாய்.
 
ஞானமடையும்போது முழுமையான மோனத்தில், தெளிவு பிறக்கும்.
 
அமைதியாக அமர்ந்திருக்கும்போது தெளிவால் நீ நிறைவாய்.
 
தியானம் செய் – தெளிவு, உணர்வு, அமைதி ஆகியவை உன்னுள் வளரும்.
 
சலிப்பை மிகவும் சரியான விதத்தில் உபயோகித்தால் அது தெளிவை உருவாக்கும்.