my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

வெள்ளி, 23 மார்ச், 2012

ஓஷோ முத்துக்கள்

1.யின் – யாங்
 
பிரபஞ்சம் இரண்டுவித சக்திகளால் ஆனது. மேல்மட்டத்தில் இரண்டும் எதிரெதிரானவை, ஆனால் ஆழத்தில் அவை எதிரெதிரானவை அல்ல. இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. அவற்றை யின் – யாங் என்றோ, எதிர்மறை – நேர்மறை என்றோ, ஆண் – பெண் என்றோ கூறலாம். உண்மையில் யின் – யாங் எல்லா விதமான எதிரெதிரானவற்றையும் இணைத்துச் செல்கிறது. அடிப்படை உண்மை என்னவென்றால் எதிரெதிரானவை எதிரெதிரானவை அல்ல, முரண்பாடுகளல்ல, அவை ஒன்றோடு ஒன்றோடு இணைந்தவை, ஒன்றை ஒன்று சமன் படுத்துபவை.
 
ஆணுக்குள்ளும் பெண்ணுக்குள்ளும் உள்ள எதிர்மறை சக்தியை கண்டுபிடித்து ஒன்றாக இணைய தியானம் உதவுகிறது.
 
மனிதன் எனபவன் ஆண் பாகமும் பெண் பாகமும் ஒன்றாய் உள்ளே இணைந்தவன்தான்.
 
இந்த உலகின் பிரிவினைகள் அனைத்தும் மனதின் பிரிவினைகள்தான்.
 
யின் – யாங் என்பது ஒரு வட்டம், ஆண் தன்னுள் பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும், பெண் தன்னுள் ஆணை கண்டு பிடிக்க வேண்டும்.
 
அரிஸ்டாட்டிலின் தர்க்கத்தின் அடிப்படையில் மட்டுமே வாழ்க்கை அமைவதில்லை, அதில் இரண்டும் கலந்திருக்கிறது.
 
2.மேல் நோக்கி செல்லுதல்
 
உனது சக்தி மேல் நோக்கி செல்ல ஆரம்பிக்கும்போது புவியீர்ப்பு விசை உனது சக்தியை பாதிப்பதில்லை என எல்லா ஞானிகளும் விளக்கி கூறுகின்றனர். உனது சக்தி வேறொரு விதியின் படி செயல்பட ஆரம்பிக்கிறது, ஒளியின் விதி. நீ மேல் நோக்கி எழ ஆரம்பிக்கிறாய், பின் மனிதனுக்கு ஒரு புதுவிதமான வித்தியாசமான உலகத்தைப்பற்றி தெரிய வருகிறது.
 
ஜென்குரு உன்னை அடிக்கும்போது உனது சக்தி மேல் நோக்கி எழுகிறது, நீ கவனமடைகிறாய்.
 
புத்திசாலித்தனம் மேல் நோக்கி எழுகிறது, அறிவுஜீவித்தனம் கீழ் நோக்கி செல்கிறது.
 
எந்த அளவு உன்னிடம் தன்னுணர்வு இருக்கிறதோ அந்த அளவு உனது சக்தி மேல் நோக்கி பாய்கிறது.
 
குணடலினி என்பது ஒரு மையம், அது சக்தி மேல் நோக்கி எழும்போது செயல்பட ஆரம்பிக்கிறது.
 
தண்ணீரும் மேல் நோக்கி போகும். ஆனால் அதற்கு சிறிதளவு சூடு தேவை, அவ்வளவுதான்.
 
3.அழகு
 
அழகு என்பது அன்பின் உருவாக்கம்தான். அன்பிற்குரியவர் மிக அழகாக தோன்றுவார், அது அன்பு கொண்ட கண் உருவாக்குவது. சாதாரணமாக மக்கள் அடுத்தவர் மிக அழகாக தோன்றியதால் தாங்கள் அன்பில் விழுந்து விட்டதாக நினைக்கின்றனர். உண்மை இதற்கு நேர் எதிரானது. அவர்கள் காதலில் விழுந்து விட்டதால்தான் அடுத்தவர் மிக அழகாக தோன்றுகின்றனர். அன்புதான் அடிப்படை.
 
அழகு உடல் சார்ந்தது மட்டுமல்ல, அடிப்படையில் அது ஆன்மீக ரீதியானது.
 
உனது கண்ணாடியை சுத்தம் செய், உன்னைச் சுற்றி எவ்வளவு அழகு உள்ளது என்று பார்க்க முடியும்.
 
ஒரு படைப்பு செயல் இந்த உலகின் அழகை மேலும் வளப்படுத்தும்.
 
வன்முறையின்றி ஏதாவது நிகழும்போது அது அதற்கே உரிய அழகை கொண்டுள்ளது.
 
எங்கெல்லாம் நீ அழகை பார்க்கிறாயோ அப்போது நீ புனித பூமியில் நிற்பதை நினைவில் கொள்.
 
இறைமையின் முதல் தரிசனம்தான் அழகு.

ஓஷோ முத்துக்கள்

1.       எழுச்சி
 
நான் புரட்சியை போதிக்கவில்லை, நான் எழுச்சியை போதிக்கிறேன். இந்த வேறுபாடு மிகவும் பெரியது. புரட்சி அரசியல்ரீதியானது, எழுச்சி ஆன்மீகரீதியானது. புரட்சிக்கு நீ உன்னை ஒரு ராணுவம் போல ஒருங்கிணைத்துக் கொண்டு எதிரிகளுடன் போராட வேண்டும். எழுச்சி எனில் நீ ஒரு தனிப்பட்டவனாக எதிர்க்க வேண்டும். இந்த பழமை முழுவதிலும் இருந்து நீ வெளி வர வேண்டும்.
 
எழுச்சியின் மூலம் உனது இதயம் ஒரு அன்பு மலராக விரிவடையும்.
 
ஒரு துறவியின் இருப்பில் எழுச்சியின் சுவை இருக்கும்.
 
புத்திசாலித்தனம் சிறந்தது, அதனினும் சிறந்தது எழுச்சி
 
வேரூன்றியுள்ள அனைத்து மதங்களுக்கும் எதிராக மிகப் பெரிய எழுச்சி எழ இதுதான் நேரம்.
 
எழுச்சி எல்லா அடிமைத்தனங்களுக்கும் எதிரானது, வாழ்வை முழுமையான சுதந்திரத்தில்வாழ்வது.
 
உன்னுடைய எழுச்சியில் அன்பின் மணம் இருக்க வேண்டும்.
 
 
2.       உருகுதல்
 
அறியாமல் இருப்பதுதான் மிகவும் அணுக்கமானது. உனக்கும் நிதர்சனத்துக்கும் இடையே ஒரு சிறந்த நட்பு, ஒரு அன்யோன்யம் எழும். சூரியன் வரும்போது பனித்துளி கரைவதைப் போல நீ உருகிப் போவாய். அது நேசஉறவு. நீ நிதர்சனத்துடன் ஒன்றி விடுகிறாய். நிதர்சனம் உன்னுள் ஊடுருவுகிறது. காதலர்கள் ஒருவருக்குள் ஒருவர் ஊடுருவுவதைப் போல.
 
அகம்பாவத்தை விட்டுவிடு. அப்போது நீ மலர ஆரம்பிப்பாய், உருக ஆரம்பிப்பாய் – நீ உயிர்ப்புடன் இருப்பாய்.
 
ஒரு மலரை முழுமையாக கவனி, ஒன்றிவிடுதலையும் உருகுவதையும் நீ அனுபவப்படுவாய்.
 
நீ உண்மையிலேயே ஒருவரை நேசித்தால் உனது ஆணவம் நழுவதையும் கரைவதையும் நீ உணர்வாய்.
 
சிறந்த நடனமாடுபவர்கள் மெதுமெதுவாக அதனுள் கரைந்து உருகி போவார்கள்.
 
நீ அன்பு சக்தியினுள் செல்லும்போது நீ கரைவாய், ஆனந்ததில் மலர்வாய்
 
 
3.       தெளிவு
 
 உனது அமைதியில் வார்த்தைகளின்றி இருக்கும்போது மொழியின்றி இருக்கும்போது யாரும் அங்கு இல்லாத போது நீ பிரபஞ்சத்துடன் லயப்பட்டு விடுகிறாய். இந்த தெளிவு இந்த ஒருமை உனக்கு அளவற்ற பரிசுகளை கொண்டு வரும். அது உனது முழு திறனுடன் நீ மலர உதவும். முதல் முறையாக நீ தனிப்பட்டவனாக உணர்வாய், உனக்கு சுதந்திரத்தின் சுவை தெரியும்.
 
இரவுக்கு அதற்கென ஒரு அழகு உண்டு, அதில் ஆழமும், அமைதியும், தெளிவும் இருக்கும்.
 
உறுதியான தெளிவுடனும் அமைதியுடனும் இருக்கும்போது நீ முழுமையான சுமை குறைந்தவனாக உணர்வாய்.
 
ஞானமடையும்போது முழுமையான மோனத்தில், தெளிவு பிறக்கும்.
 
அமைதியாக அமர்ந்திருக்கும்போது தெளிவால் நீ நிறைவாய்.
 
தியானம் செய் – தெளிவு, உணர்வு, அமைதி ஆகியவை உன்னுள் வளரும்.
 
சலிப்பை மிகவும் சரியான விதத்தில் உபயோகித்தால் அது தெளிவை உருவாக்கும்.