my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

திங்கள், 23 ஜூலை, 2012

கடவுளின் நிலை


இந்த சமுதாயமே அறிந்த ஒரு குற்றவாளி கோயிலுக்கு சென்றான்.ஆனால் கோவில் நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.கோவிலின் வெளியே நின்றபடி கடவுளை வேண்டினான்.கடவுளே நான் குற்றவாளி என்ற காரணத்தால் உன்னை தரிசிக்க விட மறுக்கிறிர்கள் என்று கண்ணீர் மல்க வேண்டினான்.
உடனே ஒரு குரல் ஒலித்தது அதற்காக ஏன் கவலைபடுகிறாய்.அவர்கள் என்னையே உள்ளே அனுமதிப்பது இல்லை என்று கடவுள் கூறினர் 

பணம்----------2


பணம் ஓரு பிரச்சனை அல்ல! அதனை உபயோகபடுத்தலாம்.
உன்னிடம் அது இருந்தால் உபயோகப்படுத்து ; உன்னிடம் பணம் இல்லாவிட்டால், பணம் இல்லாதபோது உனக்கு இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்து. இதுதான் என்னுடைய வழிமுறை. நீ பணக்காரனாக இருந்தால் ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் அனுபவிக்கமுடியாத சில இன்பங்களை செல்வம் கொண்டுள்ளது. நான் செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், நான் உண்மையாக கூறுகிறேன், பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய ஓரு சில விஷயங்கள் இருக்கின்றன. உன்னிடம் செல்வம் இருக்கும்பொழுது ஆனந்தமாக அனுபவி. நான் திரும்பவும் உன்னிடம் கூறுகிறேன், நான் 
செல்வத்தோடும் இருந்திருக்கிறேன், ஏழையாகவும் இருந்திருக்கிறேன், ஏழை மக்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய விஷயங்கள் சில இருக்கின்றன. இரண்டையும் ஓரே சமயத்தில் அனுபவிக்கமுடியாது.
எனவே எப்போதானாலும், நடப்பது என்னவாக இருந்தாலும், ஆனந்தமாக அனுபவி. ஏழை மனிதன் ஓரு வகையான சுதந்திரத்தைக் கொண்டுள்ளான். வறுமை ஓரு வகையான தூய்மையை, ஓரு ஓய்வுதன்மையை, திருப்தியான தன்மையை கொண்டுள்ளது. மனம் மிகவும் 
கவலைபடுவதில்லை. கவலைபட ஏதுமில்லை, நீ நிம்மதியாக உறங்கலாம். ஏழை மனிதனுக்கு தூக்கமின்மை இயலாதது. எனவே குறட்டை விட்டு நன்றாக தூங்கு. ஏழ்மையிலிருந்து வரும் சுதந்திரத்தை ஆனந்தமாக அனுபவி.
சில சமயங்களில் நீ செல்வந்தனாக இருந்தால், செல்வத்தை அனுபவி, ஏனெனில் பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்ககூடிய சில . சிறந்த ஓவியங்களை உனது சுவற்றில் நீ மாட்டலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உனது வீட்டில் 

நீ சிறந்த இசையை வைத்திருக்கலாம். ஏழை அவ்வாறு செய்ய இயலாது. உன்னுடைய வீட்டை சுற்றி நீ ஜென் தோட்டம் அமைக்கலாம், ஏழை அவ்வாறு செய்ய இயலாது. நீ கவிதை படிக்கலாம், நீ வரையலாம், நீ கிதார் வாசிக்கலாம், நீ ஆடலாம்பாடலாம், தியானம் செய்யலாம் ஆயிரக்கணக்கான விஷயங்கள் கிடைக்கின்றன.
என்னுடைய வழி: எது எப்படியிருந்தாலும், நீ அதன் மூலம் என்ன செய்யமுடியும் என்று பார். அது வறுமையாக இருக்குமானால் புத்தராக ஆகிவிடு. ஊர் சுற்றத் தொடங்கு, ஓரு பிச்சை பாத்திரத்தை எடுத்து கெரள். 

பிச்சைக்காரருக்கு மட்டுமே இருக்ககூடிய அந்த அழகை அனுபவி. அவர் எந்த இடத்தையும் சேர்ந்தவரல்ல, இன்று இங்கே இருக்கிறார், நாளை அவர் போய்விடுவார். அவர் ஓரு ஓட்டம். அவருக்கு எந்த வீடும் இல்லை. மழை வரபோகிறது கூரையை சரிசெய்யவேண்டும் என்ற கவலை அவருக்கு இல்லை. யாராவது எதையாவது திருடிவிடுவார்களோ என்னும் பயம் அவருக்கு இல்லை. அவரிடம் எதுவும் இல்லை.
வறுமையாக இருக்கும்பொழுது வறுமையை ஆனந்தமாக அனுபவி. செல்வம் இருக்கும்பொழுது ஜனகராக ஆகிவிடு, அரசனாக ஆகிவிடுபணத்தினால் கிடைக்கும் அனைத்து அழகுகளையும் அனுபவி.
என்னுடைய வழி முழுமையானது. நான் உனக்கு தேர்ந்தெடுக்க கற்றுத் தரவில்லை, நான் வெறுமனே ஓரு புத்திசாலியான மனிதன் எது எப்படியிருந்தாலும் அதனை அழகாக்கிவிடுவான் என கூறுகிறேன். புத்தியில்லாத மனிதன் சிரமப்படுகிறான். அவனிடம் பணமிருந்தால் அவன் சிரமப்படுகிறான் ஏனெனில் பணம் கவலைகளை கொண்டுவருகிறது. அவன் பணம் கொண்டுவரக்கூடிய இசையைநடனத்தை, ஓவியத்தை இரசிப்பதில்லை. அவனிடம் பணம் இருந்தால் அவன் ஓய்வெடுக்க, தியானம் செய்ய, பள்ளதாக்குகளில் கத்திப் பாட, மற்றும் நட்சத்திரங்களோடு பேச அவன் செல்வதில்லை, அவன் கவலைபடுகிறான், தனது உறக்கத்தை இழந்துவிடுகிறான், பசியை இழந்துவிடுகிறான். பணம் இருக்கும்பொழுது அவன் தவறானதை தேர்ந்தெடுக்கிறான்.


 இந்த மனிதன் எப்படியோ ஏழையானால், கடவுளின் அருளால் ஏழையானால், பிறகு அவன் ஏழ்மையில் சிரமப்படுகிறான், பிறகு அவன் தொடர்ந்து “அது இல்லை, இது இல்லைஎனக் கவலைப்படுகிறான். உன்னிடம் வறுமை உள்ளது!அதனை ஆனந்தமாக அனுபவி!


நான் பணத்தை எதிர்க்கவில்லை. பணப்பிடிப்புள்ள மனத்தன்மையை தான் எதிர்க்கிறேன்! பொருட்களை வைத்திருப்பதை நான் எதிர்ப்பதில்லை.
நான் பிடித்து வைத்துக் கொள்ளும் தன்மையையே எதிர்க்கிறேன். இவை இரண்டும் முற்றிலும் வேறுபட்ட பரிமாணங்கள்ஓன்றுக்கெரன்று எதிரானவை.
பணத்திற்கு எதிராக இருப்பது முட்டாள்தனம். பணம் ஓரு அழகான கருவி- பரிமாற்ற கருவி. பணம் இல்லாமல் முன்னேற்றம் அடைந்த கலாச்சாரமோ, சமுதாயமோ, பண்பாடோ, இருக்கமுடியாது.பணம் உலகில் இருந்து மறைந்துவிட்டது என கற்பனை செய்து பாருங்கள். பிறகு வசதி, வாய்ப்பு அனைத்தும் அதனோடு சேர்ந்து மறைந்துவிடும். மக்கள் மிகவும் வறுமையில் தள்ளப்படுவார்கள். பணம் மிகப்பெரிய பணியை செய்துள்ளது. ஓருவர் அதனை பாராட்ட வேண்டும்.
ஆகவே நான் பணத்திற்கு எதிரியல்ல, ஆனால் நான் பணப்பிடிப்புள்ள மன தன்மைக்கு எதிரானவன்.- மக்கள் வேறுபடுத்துவதில்லை. முழு மனித சமுதாயத்தின் கடந்த காலமும் குழப்பத்திலேயே இருந்து வந்துள்ளது.
பணப்பிடிப்புள்ள மன தன்மையை விட்டுவிடுங்கள். ஆனால் பணத்தை துறக்க வேண்டிய அவசியம் இல்லை. பணம் உருவாக்கப்பட வேண்டும், செல்வம் உருவாக்கப்படவேண்டும். செல்வம் இல்லாவிடில் எல்லா அறிவியலும் மறைந்துவிடும், எல்லா தொழில்நுட்பங்களும் மறைந்துவிடும், மனிதனின் சிறந்த சாதனைகள் அனைத்தும் மறைந்துவிடும். மனிதனால் நிலவுக்கு செல்லமுடியாது, மனிதனால் பறக்க இயலாது. பணம் இல்லாவிடில், மொழி இல்லாவிடில் எல்லா கலைகளும், எல்லா இலக்கியங்களும், எல்லா கவிதைகளும், எல்லா இசையும் அழிந்துவிடுவதைப் போல, வாழ்வு உற்சாகம் இழந்துவிடும். மொழி உனக்கு எண்ணங்களை பரிமாறிக்கொள்ள, தெரிவிக்க உதவுவதைப் போல, பணம் உனக்குப் பொருட்களை பரிமாறிக்கொள்ள உதவுகிறது. அதுவும் ஓருவகை தொடர்புபடுத்திக் கொள்ளுதலேயாகும்.
ஆனால் பண-மனம் படைத்த மக்கள் பணத்தை பிடித்து வைத்து கொள்கிறார்கள். அவர்கள் பணத்தின் முழு பயனையும் அழித்துவிடுகிறார்கள். அதன் பயன் ஓரு கையிலிருந்து இன்னெரரு கைக்கு செல்வதே. அதனால்தான் அது கரன்சி என அழைக்கபடுகிறது, அது மின்சாரத்தைப்(கரண்ட்)போல, இருக்கவேண்டும், நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும். அது எவ்வளவு நகர்கிறதோ, அவ்வளவு நல்லது. சமுதாயம் அந்த அளவிற்கு செல்வச்செழிப்பு அடைகிறது.
என்னிடம் ஓரே ஓரு ரூபாய் இருந்தாலும் அது நகர்ந்துகொண்டே இருக்கிறது. அது ஐயாயிரம் சந்நியாசிகளிடம் நகரும்பொழுது அந்த ஓரு ரூபாய் ஐயாயிரம் ரூபாய் ஆகிறது. அது அதிகமாக நகர்ந்தால் அதிக பணம் உருவாக்கப்படுகிறது. 

அது ஐயாயிரம் ரூபாய் இருந்ததை போல செயல்பட்டுள்ளது- வெறும் ஓரு ரூபாய் !ஆனால் பண-மனம் படைத்த மனிதன் அதனைப் பிடித்துகொள்கிறான். அவன் அது கரன்சியாக இருப்பதை நிறுத்திவிடுகிறான். அவன் அதனை பிடித்து வைத்து கொள்கிறான். 

அதனிடம் அவன் பிடிப்பு கொள்கிறான், அவன் அதனை உபயோகப்படுத்துவதில்லை

பணம்-------1


நீ பணத்தை ஓரு பிரச்சனையாக்கினால் ஓழிய அது ஓரு பிரச்சனையே அல்ல, காலங்காலமாக, தன்னை மதவாதிகள் என கூறிகொள்ளும் மக்கள், பணத்தைப் பற்றி மிகவும் கவலை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள், பணம் பற்றி கவலைப் படுவது ஓரு முட்டாள்தனமான விஷயம்! அதனோடு விளையாடுங்கள் !அது உன்னிடம் இருந்தால் அதை ஆனந்தமாக அனுபவி!


அது உன்னிடம் இல்லாவிட்டால் அது இல்லாத சுதந்திரத்தை ஆனந்தமாக அனுபவி!அது இல்லாதபோது நீ வேறு என்ன செய்யமுடியும் ?ஆனந்தமாக 
அனுபவி! அது உன்னிடம் இருக்கும்பொழுதும் வேறு என்ன செய்யமுடியும்? ஆனந்தமாக அனுபவி! அதைப் பற்றி தேவையில்லாத 
பிரச்சனைகளை உருவாக்காதே. பணம் ஓரு பொம்மை. சில சமயங்களில் உன்னிடம் அது இருக்கும், அப்போது அதனோடு விளையாடு.
ஆனால் என்னுடைய உணர்வு என்னவென்றால் : பணத்தோடு விளையாடமுடியாத மக்களே, பணத்தை துறக்கிறார்கள்- அவர்கள் 
அதைப்பற்றி மிகவும் இறுக்கமாக இருக்கிறார்கள். அவர்கள் பணத்தைப் பற்றி மிகவும் பயப்படுகிறார்கள், ஏனெனில் ஆழமாக அடியில் அதனை பிடித்துகொண்டிருக்கிறார்கள்.
உனக்கு தெரியுமா? மகாத்மா காந்தியின் தலைமை சீடர் வினோபா பாவேவால் பணத்தை பார்க்க இயலாது. நீ வெறும் ஓரு ரூபாய் தாள் - மதிப்பற்றது, அதை அவர் பார்வைக்கு கொண்டுவந்தால் அவர் தனது கண்களை மூடிக்கொள்வார். இது எந்த வகையான மனோபாவம்? இது துறவியின் செய்கையாக கருதப்படுகிறது ;நாடு முழுவதும் இவர் பணத்தை துறந்தவர் என பாராட்டபடுகிறார். 

நீ உண்மையிலேயே பணத்தை துறந்திருந்தால், எதற்காக நீ கண்களை மூடவேண்டும்?நீ கண்களை மூடும் அளவிற்கு அந்த ஓரு ரூபாய் தாள் ஈர்ப்பு உடையதாகவா உள்ளது? நீ கண்களை மூடாவிட்டால் அந்த ஆளின் 
மீது குதித்துவிடுவாய் என பயமாக உள்ளதா?கண்டிப்பாக ஏதோ ஓன்று இருக்கவேண்டும். இது சிறிது அதிகப்படியாக தோன்றுகிறது. அதிக பயம் உள்ளது இல்லாவிட்டால் எதற்காக உன் கண்களை மூடவேண்டும்? பல விஷயங்கள் கடந்து செல்கின்றன

ஆனால் நீ உனது கண்களை மூடுவதில்லை இது வெறும் பணம். 
பணம் என்பது ஓன்றுமில்லை பொருட்களை பரிமாற உதவும் வெறும் ஓரு கருவி. ஆனால் மக்கள் உண்மையிலேயே அடி ஆழத்தில் கஞ்சர்கள். பிடித்து தொங்குபவர்கள், அவர்களின் பிடித்துவைக்கும் தன்மையாலும், அவர்களின் கஞ்சதனத்தாலும்அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள், துன்பப்படுகிறார்கள். முடிவில் ஓருநாள் அவர்கள் பணம்தான் அவர்களுக்கு 
துன்பத்தை விளைவிக்கிறது என நினைத்துக் கொள்கிறார்கள்.


 பணம் உனக்கு துன்பத்தை விளைவிப்பதில்லை, பணம் எப்படி உனக்கு துன்பம் விளைவிக்கமுடியும்? கஞ்சத்தனம்தான் உனது துன்பத்தை விளைவிக்கிறது. பணம்தான் துன்பத்தை விளைவிக்கிறது என நினைத்துக்கொண்டு, அவர்கள் பணத்தை துறக்கிறார்கள். அவர்கள் பண உலகிலிருந்து தப்பி செல்கிறார்கள், பிறகு அவர்கள் தொடர்ந்து பயந்துகொண்டிருக்கிறார்கள், அவர்களின் கனவுகளில் அவர்கள் வங்கிகளுக்குள் நுழைந்து பெட்டகத்தை திறப்பது போன்ற விஷயங்கள் நடக்கும் பணத்தின் மீது இச்சை கொள்வதால் அது கண்டிப்பாக நடக்கும்.

வியாழன், 19 ஜூலை, 2012

கடவுளிடம் பேச எந்த மொழி வேண்டும் ?


ஆசிரமத்து     குருநாதரிடம்  புதிதாய்   வந்த  ஒருவன் 
"நான் கடவுளைப்  பார்க்கணும்" என்றான். 
"அதுக்கு ஏன்  என்னைத்தேடி வந்தாய்?" 
"கடவுளை எப்படிப்பாக்கறது எந்த மொழில பேசறது என்கிற  விவரம் 
தெரிஞ்சிட்டுப்போகவந்தேன் " 
"சரி   என் சீடர்கள்  சிலபேர் ஆசிரம தோட்டத்துல இருக்காங்க பாத்துவரலாம் 
என்கூட புறப்படு" 
தோட்டத்தில் ஒருமரத்தடியில் அவர் சிஷ்யர்கள் இருவர்  பேசிக்கொண்டு இருந்தனர் 
குருநாதர்  வந்தவனிடம்"அவங்க என்ன செய்யறாங்க?" என்றார். 
"ஒருத்தர் இன்னொருத்தர்கூட பேசிட்டு இருக்கார்" 
"சரி அதோபார்!  அந்த மரத்தடில  ஒருத்தன் உக்காந்துட்டு என்ன செய்றான்?' என்று 
இன்னொரு மரத்தின்கீழ் தனியே உட்கார்ந்திருந்தவனைச்சுட்டிக்காட்டி 
கேட்டார். 
:"அவர் சும்மா உக்காந்திருக்கார்" 
 குருநாதர் சிரித்தார். 
பிறகு."முதல்லபார்த்த ரெண்டுபேரும் தங்கள் இருவருக்குள் 
பேசிக்கொண்டார்கள்.இந்தமனிதன்  கடவுளோடு பேசிக்கொண்டு இருக்கிறான் " என்றார். 
"என்ன சொல்றீங்க?"  என குழம்பினான் வந்தவன். 
"ஆமாம்  ஒருமனிதன் இன்னொரு  மனிதனோட  பேச மொழி வேணும் அதுதான் 
தொடர்புச்சாதனம். ஒருமனிதன் கடவுளோட பேசணும்னா மௌனம் தொடர்புசாதனம்.  கடவுளோட 
நீ தொடர்புகொள்ளணும்னா   மௌனமாஇரு" 

 வந்தவன் சற்று நேரம் யோசித்தவன் கடவுளோடு எந்த  மொழில பேசணும்னு 
புரிந்துகொண்டான். 
அந்தக்கடவுள் தனக்குள்ளே இருக்கிற  ஓர் உண்மை என்பதையும் புரிந்துகொண்டான் 

ஓஷோ சொல்கிறார்... 
"நீ  பிறந்தபோது மௌனத்தை    தான் உலகத்துக்கு  கொண்டுவந்தாய்.. மொழி 
உனக்குதரப்பட்டது....சமூகத்துடன் பழக அது ஒர் அன்பளிப்பு ...அது ஒருகருவி 
...
சாதனம், 
ஆனால் மௌனம் இந்த உலகத்துக்கு நீ கொண்டுவந்தது. அந்த மௌனத்தை அடையமீண்டும் 
முயற்சி செய் ...அதாவது சின்னக்குழந்தையாகிவிடு" 
உண்மைதானே? 
  குழந்தை மனம் வந்துவிட்டால்  தெய்வம் அங்கு ஓடிவந்து குடிகொள்ளாமலா போகும்? 

.

புதன், 11 ஜூலை, 2012

அன்பின் சொர்க்கம்


இரண்டு சகோதரர்கள் இருந்தனர்.ஒருவர் பிரமச்சாரி இன்னொருவர் திருமணமானவர்.அவர்கள் இருவரும் தங்கள் நிலத்தில் விவசாயம் செய்து தானியங்களை சமமாக பங்கிட்டு கொள்வார்கள்.
திருமணமான சகோதரன் தூக்கத்திலிருந்து அடிக்கடி எழுந்து யோசிப்பான்.இது அழகல்ல!என்னுடைய சகோதரன் பிரமச்சாரி .விளைச்சலில் பாதிப்பங்கு அவனுக்குச் செல்கிறது.இங்கு நான்,என் மனைவியோடும் ஐந்து குழந்தைகளுடனும்,என் முதுமைக்காலத்திற்கு தேவையான சகல பாதுகாப்புடன் இருக்கிறேன்.ஆனால்,என் சகோதரன் வயோதிகப் பருவத்தில் கவனிக்க யார் இருக்கிறார்கள்.எதிர்காலத்திற்கான சேமிப்பு ,என்னை விட அவனுக்குதான் அதிகமாக இருக்க வேண்டும்.என்னை விட அதிகமான பங்கினை தருவதுதான் முறை "
இந்த சிந்தனையில் படுக்கையை விட்டு எழுந்த அவன் ,தன்னுடைய தானிய களஞ்சியத்தில் இருந்து  மூட்டை நெறைய தானியங்களை எடுத்து போயி தன் சகோதரன் களஞ்சியத்தில் ரகசியமாக வைத்தி விட்டான்.
இதே போன்று எண்ணம் கொண்ட பிரமச்சாரி சகோதரன்னுக்கும் அடிக்கடி ஏற்ப்பட்டது அவனும் துக்கத்தில் இருந்து எழுந்து இப்படி சொல்வான்.
இது கொஞ்சம் கூட நன்றாக இல்லை.மனைவியோடும் ஐந்து குழந்தையோடும் வாழும் என் சகோதரனுக்கும் விளைச்சலில் பாதி போகிறது.நான் தனி கட்டை.எனகென்றும்  யாரும் இல்லை அதனால் குடும்பஸ்தனான என் சகோதரன்,என்னை விட அதிகமாக தானியங்கள் பெறுவதுதான் நியாயம்"இப்படி நினைத்த அவன் படுக்கையை விட்டு எழுந்து தன் களஞ்சியத்திலிருந்து மூட்டை நெறைய தானியங்களை எடுத்து போயி ,சகோதரனின் களஞ்சியத்தில் வைத்து விட்டான்.
இதே போல்,ஒவொரு விளைச்சல் முடிந்தபின்பும்,இருவரும் பங்கிட்டுக்கொண்ட பிறகு தான்யங்களை சகோதர்கள் இருவரும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர்,மாற்றிவைத்து கொண்டு இருந்தனர்.ஒரு சமயம் இருவரும் எதிர் எதிராக சந்தித்து கொண்ட பொழுது இருவர் கண்களும் கலங்கி போயிருந்தனர்.அந்த அன்பு என்ற கண்ணீர் துளியில்தான்,சகோதரர்கள்   சந்தித்த இடத்தில்தான் பிற்காலத்தில் அந்த கிராமமே கோவில் கட்டியது  

ஞாயிறு, 8 ஜூலை, 2012

ஒரு மனைவியின்(பிசாசு)கதை


ஒருவனுடைய மனைவி மிகவும் நோய்வாய் பட்டு மருத்துவமனையில் இருந்தாள். அவள் இறக்கும் தருவாயில் தன்னுடைய கணவனிடம் உன்னை விட்டுவிட்டு போகுவதற்கு மனம் இல்லை. உயிரோடு இருக்க மாட்டேன் என்பது நிச்சயம். ஆனால் எனக்கு நீ துரோகம் செய்வது பிடிக்காது. எனக்கு ஒரு சத்தியம் செயது கொடுக்க வேண்டும். நான் செத்த பின்பு வேறு எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்" என்றுக் கேட்டாள். கணவனும் அவள் கேட்டவாறே சத்தியம் செய்து கொடுத்தான். "சத்தியத்தை மீறி திருமணம் செய்தால் ஆவியாக வந்து உன்னை நான் துன்புறுத்துவேன்" என்று பயமுறுத்தி விட்டு செத்தாள்.

பல மாதங்கள் தன்னுடைய மனைவிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை தவறாமல் காத்து வாந்தான். ஆனால் முடிவில் எதேச்சையாக சந்தித்த ஒரு பெண்ணிடம் மனதை பறிகொடுத்தான். இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்யப் பட்டது. அன்று இரவு ஆவியாக அவனுடைய மனைவி வந்தாள். அவன் தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்று மிகவும் குறைபட்டுக் கொண்டாள். அதன் பிறகு ஒவ்வொரு இரவும் அவன் தூங்குபோது வந்து அவனை தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள். எதிர்கால மனைவியுடன் அவன் தனிமையில் பேசிய ஒவ்வொன்றையும் அந்த பிசாசு ஒரு வார்த்தை கூட மாறாமல் திருப்பிக் கூற ஆரம்பித்தது. நாட்கள் செல்ல செல்ல அதனுடைய தொந்திரவு அதிகரிக்க ஆரம்பித்தது அவனால் கொஞ்சம் கூட தூங்க முடியவில்லை.
பக்கத்து கிராமத்தில் இருந்த ஸென் ஆசிரியர் ஒருவரிடம் நடந்த கதை எல்லாவற்றையும் கூறி தன்னை அந்தப் பிசாசிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். "மிகவும் புத்திசாலியான பிசாசாக இருக்கும் போலிருக்கிறதே" என்று கதையைக் கேட்ட ஸென் ஆசிரியர் அவனைப் பார்த்துக் கூறினார். "ஆமாம்அது நான் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் அறிந்து வைத்து இருக்கிறது. நான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் நினைவு வைத்திருந்து என்னிடமே திரும்ப சொல்கிறது" என அசிரியரைப் பார்த்து பரிதாபமாக கூறினான். "அந்த பிசாசை நாம் பாராட்டமல் இருக்க முடியாது. இருந்தாலும் நான் கூறுவைதைப் போல் அடுத்த முறை செய்" என்று அவன் காதில் ஒரு விஷயத்தைக் கூறினார்.
அன்று இரவு வந்த பிசாசிடம்ஸென் ஆசிரியர் கூறியவாறு "நீ உண்மையிலேயே புத்திச்சாலியான பிசாசு" என்று கூறியவன்மேலும் தொடர்ந்து "உன்னிடமிருந்து நான் எதையும் மறைக்க முடியாது. நீ என்னுடைய ஒரு கேள்விக்கு பதில் அளித்தால்நான் என்னுடைய நிச்சய தார்த்தை நிறுத்தி விடுகிறேன். மேலும் வாழ்நாள் முழுவதும் தனி மனிதனாகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறேன்" என்று அவனுடைய முன்னாள் மனைவி இன்னாள் பிசாசினைப் பார்த்துக் கூறினான். "உன்னுடைய கேள்வியைக் கேள்"என்று பிசாசு கூறியது தான் தாமதம் கீழே ஒரு பெரிய பின்ஸ் மூட்டையில் இருந்து ஒரு கைப்பிடி பின்ஸை எடுத்துக் கொண்டு, "என்னுடைய கையில் எத்தனை பின்ஸ் இருக்கிறது என்று சொல்" என்றான்.

(
அந்த நிமிடமே அந்தப் பிசாசு அவன் கண்களிலிருந்து மறைந்தது. அன்று சென்றதுதான் என்றுமே திரும்பி வரவில்லை.
இந்தக் கதையிலிருந்து நமக்கு பல விஷயங்கள் தெரிய வருகிறது.
1. 
உன்னால் காப்பற்ற முடியாத சத்தியத்தை தராதே.
2. 
சத்தியத்தை கொடுத்த பின்பு மீற முயற்ச்சிக்காதே. உன் ஆழ்மனமே உன்னைக் காட்டிக் கொடுத்து விடும்.
மிகவும் அன்பான மனைவி தான் இறந்தபின்பு தன்னுடைய கணவன் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணாமல் சுய நலத்திற்காக ஒரு வரம் கேட்கிறாள். சத்தியம் செய்து கொடுத்த கணவனோ அதனைக் காப்பாற்ற முடிய வில்லை. உண்மையில் அங்கு ஒரு பிசாசும் இல்லை. அவன் செய்த அனைத்து செயல்களும் அவனுக்கு தெரியும். அவன் தன்னுடைய எதிர்கால மனைவியிடம் பேசிய ஒவ்வொன்றும் அவனுக்கு ஞாபகத்தில் இருக்கும்.
ஆழ்ந்த உறக்கத்தில் அவனுடைய ஆழ்மனது விழித்துக் கொள்கிறது. தன்னுடைய மனைவிக்கு கொடுத்த வாக்கை மீறுகிறோமே என்ற மன அழுத்தமே பிசாசாக உருவேடுக்கிறது. அதனால் மனைவிக்கு பிடிக்காமல் செய்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவன் கண்முன் தோன்றி அவனைத் தூக்கம் வரவிடாமல் அலைகழிக்கிறது.
நமது தன்னொளி பெற்ற ஸென் ஆசிரியர் இதனை புரிந்து கொள்கிறார். கைப்பிடி பீன்ஸை எடுத்து எத்தனை இருக்கிறது எனக் கேட்க சொல்கிறார். உண்மையில் பீன்ஸை எடுத்த அவனுக்கே எத்தனை பீன்ஸ் அவனுடைய கைப்பிடியில் இருக்கிறது என்று தெரியாது. அதணால் அவனுக்கு தெரியாத எந்த ஒரு விஷயமும் ஆழ்மனதிற்கும்பிசாசிற்கும் தெரியாமல் போகிறது. அதணால் அன்றிலிருந்து பதில் சொல்லத் தெரியாத பிசாசு வரவில்லை. ஸென் ஆசிரியர் கொடுத்த ஆழ்மனப் பயிற்சி ஒழுங்காக வேலை