பாதிரியார் ஹோலி-கோகனட் ஒரு
விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்....
நடு வழியில் துணை பைலட் வந்து " இந்த விமானத்தின் நான்கு இஞ்சின்களில் ஒன்று பழுதாகி விட்டது....ஆனால் கவலைப்பட ஒன்றும் இல்லை....அதிக பட்சமாக நாம் மூன்று மணி நேரம் தாமதமாகச் செல்வோம் அவ்வளவுதான்" என்றார்
நடு வழியில் துணை பைலட் வந்து " இந்த விமானத்தின் நான்கு இஞ்சின்களில் ஒன்று பழுதாகி விட்டது....ஆனால் கவலைப்பட ஒன்றும் இல்லை....அதிக பட்சமாக நாம் மூன்று மணி நேரம் தாமதமாகச் செல்வோம் அவ்வளவுதான்" என்றார்
சிறிது நேரம் சென்றதும் அவர்
மறுபடியும் வந்து "மன்னிக்கவும்...இரண்டாவது இன்ஜினும் செயலிழந்து
விட்டது...ஆனால் கவலைப்பட வேண்டாம்...அதிக பட்சம் ஆறு மணி நேரம் தாமதமாகும்"
என்றார்...
கொஞ்ச நேரம்
கழித்து வந்து "மூன்றாவது இன்ஜினும் போய் விட்டது....ஆனாலும் பயப்பட ஒன்றும்
இல்லை...என்ன அதிக பட்சம் ஒன்பது மணி நேரம் லேட் ஆகும்" என்றார்...
சிறிது நேரம் கழித்து அவர்
மறுபடியும் வந்து "சாரி...நான்காவது இன்ஜினும் நின்று விட்டது...இனி
எல்லாரும் அவரவர் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொள்ள வேண்டியதுதான் " என்றார்....
ஹோலி-கோகநட்டின்
அருகில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி இதைக் கேட்டு "ஐயோ, கடவுளே, இப்படி ஆயிருச்சே,,எல்லாம் போச்சே" என்று கதறி அழுது அலப்பறை
செய்தாள்....
பாதிரியார் அவளிடம்
திரும்பி "ஏன் இப்படி அழுகிறாய்....மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு பன்னிரண்டு
மணி நேரம் லேட்டாகப் போவோம், அவ்வளவு
தானே" என்றார்......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக