இரண்டு மனவியல் டாக்டர்கள்
தங்கள் தொழில் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்...
ஒருவர்
"உங்கள் வேலை எப்படி போகிறது?" என்றார்...
இன்னொருவர்
"நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது....ஒரு மனிதன் கவுன்சிலிங்கிற்காக வந்திருந்தான்....அவன்
தான் எல்லோரையும் விட உருவத்தில் கொஞ்சம் சிறியதாக இருப்பதாக தாழ்வு
மனப்பான்மையில் இருந்தான்,,,,,நான் அவனுக்கு "இதெல்லாம் பெரிய விஷயமே
இல்லை...உலகத்தில் சாதனையாளர்கள் எல்லாம் பெரும்பாலும் உருவத்தில்
சற்றுசிறியவர்களே" என்றெல்லாம் கூறி கவுன்சிலிங் கொடுத்துக் கொண்டிருந்தேன்...பணமும் நிறைய
கொடுத்தான்....என்னுடைய துரதிர்ஷ்டம் அவனை இழந்து விட்டேன்" என்றார்...
"ஓ அப்படியா...என்ன
ஆயிற்று அவனுக்கு" என்று கேட்டார் இன்னொருவர்...
"ஒருநாள் என்
வீட்டுப் பூனை அவனை தின்று விட்டது...."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக