உடலை பாருங்கள் எவ்வளவு
அற்புதமாக இயங்குகிறது .அதன் ஒவ்வொரு இயக்கமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது
.உலகத்திலே அழகான உடல் உங்களுடையது தான்.ஆனால் நாம் தான் அதை குறைத்து மதிப்பிட்டு
கொண்டே இருக்கிறோம், எந்த பன்றியும் தான் அழகில்லை என்று
வருந்துவது இல்லை நாம் மட்டும் வருந்த காரணம் அடுத்தவர் உடலை வைத்தே நம்மை
மதிப்பிட்டு கொள்வதால் தான் .உடலை மதித்து பழகுங்கள்,உங்கள்
உடலை கொண்டாடுங்கள் உங்களை விட சிறந்த அழகு வேறு இங்கு இல்லவே இல்லை .எந்த ஒரு
சிறு வேலை செய்தாலும் உடலின் சொல்லை கேளுங்கள் உதாரணமாக உங்களுக்கு பசிக்கும் போது
மட்டுமே சாப்பிடுங்கள்
ருசிக்காக சாப்பிடாதீர்கள் .உங்களுக்கு காய்ச்சல் வந்தால் தானே உடல் மீது அக்கறை
வருகிறது .காய்ச்சல் என்பதே உங்கள் உடலை நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்பதன்
வெளிப்பாடே.இந்த உடலை வைத்துக்கொண்டு தான் நீங்கள் செய்ய நினைப்பது எல்லாமே
செய்கிறீர்கள் .உங்கள் காதலியை முத்தமிட வேண்டுமென்றாலும்,உங்கள்
எதிரியை வாயில் குத்த வேண்டுமென்றாலும் இந்த உடலை தானே பயன்படுத்துகிறீர்கள்.ஆகவே
உங்கள் உடலின் எல்லா உறுப்பையும் கொண்டாடுங்கள். குளித்தாலும்,சாப்பிட்டாலும்,ஓடினாலும்,பேசினாலும்,அழுதாலும், சிரித்தாலும்,உடலுறவு
கொண்டாலும் அது உங்களின் முழுமையான வெளிப்பாடாக இருக்க வேண்டும் . உடலில் உயிர்
ஒட்டிக் கொண்டு இருக்கும் வரை அதை கொண்டாடுவதை விட்டு விட்டு அதை
வஞ்சிக்காதீர்கள்.
my playlist
புதன், 6 ஜூன், 2012
அது அதன் போக்கிலே இருக்கு!!!!!!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக