my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

ஞாயிறு, 10 ஜூன், 2012

வாழ்நாள் முழுவதும் தீமைகளைச் செய்து விட்டு கடைசி நேரத்தில் கடவுளை நினைத்தால் போதுமா ?

யாருக்கும் உதவாத ஒரு பணக்கார கஞ்சன் இறந்து சித்திரகுப்தர் முன் நிற்கிறான். அந்த பணக்காரன் கையில் இருக்கும் பணத்தை கொடுத்து சொர்க்கத்தின் கதவுகளை திறந்து விடும்படி கூறினான். 
சித்திரகுப்தர் சிரித்தபடி, " பூலோக முறைகள் இங்கு பயன் தராது. சொர்க்கத்தில் நுழையும் தகுதி பெறும் அளவிற்கு நீ யாருக்கு என்ன நன்மைகள் செய்தாய் ?" என்று கேட்டார். 
பணக்காரன் நன்கு யோசித்துவிட்டு, " ஒரு கிழவிக்கு பத்து பைசா தானம் கொடுத்தேன்" என்றான். சித்திரகுப்தர், "இது தவிரவேறு ஏதாவது நன்மை செய்து இருக்கிறாயா ? " என்று கேட்டார். 
பணக்காரன் மேலும் யோசித்து, " ஒரு அனாதை சிறுவனுக்கு ஐந்து பைசா கொடுத்தேன்" என்றான். சித்திரகுப்தர் "இன்னும் வேறு உண்டா ?" என்று கேட்டதற்கு இல்லை என்று பதிலளித்தான். 
அப்போது சித்திரகுபதரின் உதவியாளர் சித்திரகுப்தரிடம், " இந்த பணக்காரனிடம் பதினைந்து பைசாவை திருப்பிக் கொடுத்துவிட்டு அவனை நரத்திற்கு அனுப்பிவிட வேண்டும்" என்றான். 
இந்த கதையில் வெறும் பதினைந்து பைசாவில் சொர்க்கத்தை வாங்க முடியாது என்பதற்காக ஓஷோ கூறினார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக