ஒரு வியாபாரி பகல் உணவுக்காக ஒரு விடுதியை நோக்கி சென்றான்.எதிரே வந்த ஒருவன் அவரை நிறுத்தினான்.
என்னை உங்களுக்கு நினைவிருக்குமா என்று தெரியவில்லை.சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த நகரத்திற்கு நான் வந்தேன்.அப்போது உங்களிடம் கொஞ்சம் பணம் கேட்டேன்.நீங்கள் இருபது டாலர் கொடுத்து உதவினீர்கள்.
அப்பொழுது நீங்கள் ஒரு மனிதனை வெற்றி பாதையில் செல்ல இது வழிவகுக்கட்டும் என்று வாழ்த்தி கொடுத்தீர்கள் என்று சொன்னான்.
அந்த வியாபாரி சிறிது யோசித்து விட்டு,
ஆமாம்,எனக்கு ஞாபகம் வந்து விட்டது.அப்புறம் சொல்லுங்கள் என்று ஆவலுடன் கேட்டான்.
அதற்கு அவன்,இப்பொழுதும் அதை போல ஒரு சந்தர்ப்பம் எனக்கு கொடுக்க விரும்புகிறீர்களா? என்றான்.
ஓஷோ சொல்கிறார்:
வாழ்க்கை உங்களிடம் திரும்ப திரும்ப இதே கேள்வியை கேட்டு கொண்டிருக்கிறது.நீங்கள் வாழ்வதற்கு மீண்டும் தயாராக இருக்கிறீர்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக