my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

ஓஷோவின் குட்டி கதைகள்-4





ஒரு பெரிய பணக்காரன் தன் நண்பனிடம் சொன்னான்.

நான் இறந்த போன பின் என் சொத்துக்களை எல்லாம் தர்மத்திற்கு கொடுக்க இருப்பது தெரிந்தும் ஏன் எல்லோரும் என்னை குறை கூறிக்கொண்டே இருக்கிறார்கள்?

அதற்கு நண்பன் சொன்னான்:

இதற்கு பதில் கூற வேண்டுமானால்,உனக்கு பன்றி,பசுவை பற்றிய விபரங்களை சொல்ல வேண்டும்.

பன்றி பசுவிடம் தன்னுடைய ஏக்கத்தை கூறிற்று.அதாவது பன்றி எவ்வளவுதான் செய்தாலும் மக்கள் பசுவைதான் புகழ்கின்றார்கள்.பசு பால் தந்தாலும் பன்றி அதைவிட அதிகமாக தன் மாமிசத்தை தருகிறது.இருந்தும் தன்னை ஒருவரும் விரும்ப மாட்டேன் என்கிறார்கள் என்றது பன்றி.

பசு கூறியது:

நீ சொல்வது உண்மையாக இருக்கலாம்.ஏனெனில் நான் உயிருடன் இருக்கும் போதே இவைகளை கொடுத்து கொண்டிருக்கிறேன்.

ஓஷோ கூறுகிறார்:

மரணம் எல்லாவற்றையும் எடுத்து கொண்டு போய்விடும்.பின் எதற்காக கவலை படுகிறாய்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக