my playlist


MusicPlaylistView Profile
Create a playlist at MixPod.com

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

தலைவலியை குணமாக்க விரும்புகிறீர்களா?


தலைவலியின் செயற்பாட்டை நீங்கள் உணர்ந்து இருக்க மாட்டீர்கள் .தலையிலோ ,காலிலோ வலி இருந்தால் தொடர்ந்து அதனோடு போராடவோ அல்லது தடுக்கவோ முயலுவீர்கள். வலியை நீங்கள் விரும்புவது இல்லை .நீங்கள் அதனோடு எதிராக இருக்கிறீர்கள் .நீங்கள் பிளவுப் பட்டுவிடுகிறீர்கள் .தலையில் நீங்கள் ஒரு பகுதியில் ,தலைவலி ஒரு பகுதியில் இருக்கிறது .நீங்கள் தனித்தும் உங்கள் தலைவலி தனித்தும் இருக்கிறது .மேலும் அது இருக்ககுடது எனக் கட்டாயப் படுத்துகிறீர்கள் .இது தான் உண்மையான பிரச்சனை .
ஒருமுறை சண்டை போடாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் .தலை வலியோடு செல்லுங்கள் .தலை வழியாக மாறுங்கள் .இதுதான் நிலை .இந்த நிலையில் என் தலை எப்படி இருக்கிறது ?மேலும் இந்த கணத்தில் வேறு எதுவும் சாத்தியம் இல்லை .எதிர்காலத்தில் இது இல்லாமல் போகலாம் .ஆனால் இந்த கணத்தில் தலை வலி இருக்கிறது என எண்ணுங்கள் .அதனை மறுக்காதீர்கள் .அதனோடு இயைந்து ஓடுங்கள் .அதனோடு ஒன் றாகுங்கள்.அதிலிருந்து உங்களை நீங்கள் விளக்கிக்கொள்ளதீர்கள் .அதன் பிறகு புதுவிதமான நீங்கள் அறிந்திராத மகிழ்வு திடீர் என பொங்கி வருவதை உணர்வீர்கள் . மறுப்பதற்கு அங்கு யாருமில்லாத பொழுது தலைவலிக்குட மிகுந்த துன்பம் மிக்கதாக இருக்காது .அதனோடு சண்டைப் போடுவதே வலியை கொண்டுவருகிறது உண்மையான வலி இதுதான் .
ஜிசஸ் ஏற்றுக்கொண்டார் .இதுதான் அவருடைய வாழ்வை சிலுவைக்கு கொண்டுவந்தது இதுதான் விதி ,இதைதான் கிழக்கில் அதிஷ்டம் ,பாக்கியம் ,கிஸ்மத் என்று அழைக்கிறார்கள் .ஆகவே உங்கள் அதிர்ஷ்டத்தோடு வாதாட எந்த பொருளும் இல்லை .அதனோடு சண்டைப்போட விஷயம் ஒன்றும் இல்லை .அதனோடு நீங்கள் செய்யக்குடியது ஒன்றும் இல்லை . அது நிகழக் போகின்றது .உங்களால் ஒரேஒரு விஷயம் மட்டும் சாத்தியம் .ஒன்று அதனோடு செல்வது அதாவது இயைந்து செல்வது .நீங்கள் சண்டைப் போட்டீர்கள் என்றால் அது உங்களுக்கு கடுந்துயர் விளைவிப்பதாக அமையும் .அதனோடு நீங்கள் ஒன்றிணைத்து செல்வீர்கள் என்றால் துயரம் மறைந்து விடும் அதன் ஓட்டமாகவே மாறிவிடுங்கள் .
தலைவலியோடு இருக்கும்போது நீங்கள் இதை முயற்சி செய்து பாருங்கள் .உடல்நிலை சரயில்லாமல் இருக்கும் போதுஇத்தனை முயற்சி செய்து பாருங்கள் .வெறுமனே அதனோடு இயைந்து செல்லுங்கள் .ஒருமுறை இத்தனை நீங்கள் அனுபவித்தீர்கள் என்றால் அதனோடு ஒன்றிணைந்து செல்வதால் துயரம் மறைந்துவிடும் என்ற ஆழமான வாழ்க்கை ரகசியத்தை அறிந்தவராவீர்கள் .
மேலும் ,அதனோடு நீங்கள் முழுவதும் ஒன்றிணைந்து செல்வீர்கள் என்றால் வலியானது இன்பமாக மாறிவிடும் .
ஆனால் இவையொன்றும் புரிந்துக்கொள்ள வேண்டிய தர்க்க விஷயம் இல்லை .அறிவார்த்த விசயமாக இத்தனை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம் .ஆனால் இதனால் பயன் ஒன்றும் இல்லை .வாழ்க்கையில் இத்தனை முயற்சி செய்து பாருங்கள் .இதற்கு உரிய நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் இருக்கும்,சில தவறுகள் இருக்கும் அதனோடு ஒன்றிணைந்து சென்று முழுச் சூழலையும் எவ்வாறு மாற்றுகிறீர்கள் என்று பாருங்கள் .
பதஞ்சலி யோகம் , ஒரு விஞ்ஞான விளக்கம் ,ஓஷோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக