பாதத்திலிருந்து சிரி
எப்போது – இரவின் கடைசி செயலாகவும் காலையின் முதல் செயலாகவும்
முதல் படி – உட்கார்ந்து கொண்டு ஆரம்பி……
அறையின் நடுவில், கண்களை மூடிக் கொண்டு தரையில் உட்கார்.
இரண்டாவது படி – பிறகு………..
உனது பாதத்திலிருந்து சிரிப்பலைகள் கிளம்பி வருவதாக உணரு. அவை மிகவும் மெலிதானவை. பின் அவை உனது வயிற்றை அடையும் போது அவை தெரிய வரும், உனது வயிறு குலுங்கி அதிரும். இப்போது அந்த சிரிப்பை உனது இதயத்துக்கு கொண்டு வா. இதயம் நிரம்பி வழியும். பின் அதை உனது தொண்டைக்கும் பின் உதடுகளுக்கும் கொண்டு வா.
சிரிப்பு உனது பாதத்திலிருந்து ஆரம்பிக்க பட வேண்டும், பின் மேலெழ வேண்டும். சிரிப்பினால் உனது முழு உடலும் அதிர அனுமதி. ஆரம்பத்தில் நீ அதை ஒரு சிறிது மிகைப்படுத்தினால் கூட பரவாயில்லை, அது உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக